பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம்... அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி...

கைதி இறந்த வழக்கில் சிபிசிஐடி  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம்... அறிக்கை தாக்கல் செய்தது சி.பி.சி.ஐ.டி...
Published on
Updated on
1 min read
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிறையில் கைதி முத்து மனோ இறந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அறிக்கை மற்றும் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தனர். வாகை குளத்தை சேர்ந்த முத்து மனோ என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சக கைதிகளால் தாக்கப்பட்ட அவர், ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையின் நிலை அறிக்கையை சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில் சிபிசிஐடி போலீசார் வழக்கின் விசாரணை நிலை  அறிக்கையும் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com