ராஜேந்திரபாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம்..?

பண மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கை முடக்கியது காவல்துறை.
ராஜேந்திரபாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம்..?
Published on
Updated on
1 min read

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17ம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 9 வது நாளாக தேடி வருகிறது. கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது.

வெவ்வேறு கார்களில் மாறி மாறிச்சென்று தலைமறைவாக உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் முன்னதாக அறிவித்திருந்தார். தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளி நாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு  எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் பண பரிவர்த்தனை மூலம் அவரது நகர்வுகளை தடுக்கும் வகையில்  ராஜேந்திரபாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயரில் உள்ள 6 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com