
தமிழகத்தில் தகுதி பெற்ற அனைத்து குடும்பத்தினருக்கும் விண்ணப்பித்த 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படும் எனறு உணவு துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார்.
சென்னை முகப்பேரில் யாஷ் டென்டல் பல்நோக்கு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். இல்லதரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் ஊக்க தொகை வழங்குவது குறித்த கொள்கை ரீதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.