நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்  நெல்வாய் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் குழந்தைகள் விஜய், பூமிகா ஆகிய இருவரும் ஏரியில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காஞ்சிபுரத்தில் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும், உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com