தேர்தல் அறிவிப்பை செல்லாது என அறிவிக்க கோரி....ஓபிஎஸ் கடிதம்!!

தேர்தல் அறிவிப்பை செல்லாது என அறிவிக்க கோரி....ஓபிஎஸ் கடிதம்!!
Published on
Updated on
1 min read

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து, தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். 

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.  இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவரச வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.  

இந்நிலையில் பொதுக்குழு வழக்கை சுட்டிக்காட்டிய ஓபிஎஸ், தேர்தல் அறிவிப்பை செல்லாது என அறிவிக்க வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிக்க:   விரைவில் 1000 ரூபாய்...!!!

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com