+1 தேர்வில் கிராமப்புற மாணவி தமிழில் 100/100.. குவியும் பாராட்டுக்கள்!!

+1 தேர்வில் கிராமப்புற மாணவி தமிழில் 100/100.. குவியும் பாராட்டுக்கள்!!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே 10- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 8 லட்சத்து 43 ஆயிரத்து 675 30 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். அதனை திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. 11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 319 மாணவியர்கள் எழுதிய நிலையில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 612 மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.99 சதவீதமாகும். 

இதேபோல்  11 ஆம் வகுப்பு பொது தேர்வை மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 355 மாணவர்களில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 243 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 84.86 சதவீதமாகும்.

இந்நிலையில், ராமாநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மேலாய்க்குடி அரசு பள்ளி மாணவி சங்கீதா நடந்து முடிந்த +1 தேர்வில் தமிழில் 100 சதவிகித மதிப்பெண் பெற்றுள்ளார். பின்தங்கிய கிராமப்புற பள்ளியில் தமிழில் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதுடன் 538 மதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ் வழி கல்வியில் பயின்று சாதனை படைத்த மாணவியை ஆசிரியர்களும், பெற்றோர்களும் பாராட்டினர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com