போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது!! அத்துமீறிய போலீஸ்!!

மேலும் கைது செய்து பேருந்துகளில் ஏற்றும்போது இளைஞர்கள் பெண்களை போலீசார்...
protest
protest
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தங்கள் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக்கூறி, மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் கட்டிடம் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று அவர்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  இந்நிலையில் நேற்று இரவில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து தென் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை,   கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை என, பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்து பேருந்துகளில் ஏற்றும்போது இளைஞர்கள் பெண்களை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com