செந்தில் முருகனை நீக்கிய ஓபிஎஸ்...ஈபிஎஸ் முன்பு அதிமுகவில் இணைவு!

செந்தில் முருகனை நீக்கிய ஓபிஎஸ்...ஈபிஎஸ் முன்பு அதிமுகவில் இணைவு!
Published on
Updated on
1 min read

ஈரோடு இடைத் தேர்தலில், ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில், ஓ.பி.எஸ். அணி சார்பாக, செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, தனது வேட்பாளர் செந்தில் முருகனை ஓ.பி.எஸ் வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ். அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கியதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் செந்தில் முருகன் தன்னை அதிமுக-வில் இணைத்துக் கொண்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com