இலங்கையிலிருந்து அகதிகளாக நான்கு பேர் தமிழகம் வந்தனர்

இலங்கையிலிருந்து அகதிகளாக நான்கு பேர் தமிழகம் வந்தனர்
Published on
Updated on
1 min read

இலங்கையில் இருந்து அகதிகளாக நான்கு பேர் ராமேஸ்வரம் வந்து இறங்கி உள்ளனர் அவர்களை மண்டபம் மொரேன் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.திருகோணமலை பகுதியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படகு மூலம் இன்று அதிகாலை ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்கு வந்து இறங்கி உள்ளனர்.

தமிழகத்திற்கு வந்திறங்கிய அகதிகள் நான்கு பேரும் 2006 முதல் 2019 வரை மண்டபம் இலங்கை தமிழர் முகாமில் பதிவில் இருந்தவர்கள் என்பதால் இவர்கள் நேரடியாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று அகதிகளாக வந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்

அவர்களிடம் மரைன் போலீசார்  விசாரணை மேற்கொள்ளும் பொழுது இலங்கை திருகோணமலை பகுதியைச் சேர்ந்த ஜெயமாலினி, பதுர்ஜன், ஹாசிம் கான்,பாதுஷிகா, என இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் என தெரிய வந்துள்ளது.இதுவரை இலங்கையில் இருந்து 134 பேர் அகதிகளாக தமிழகம்  வந்துள்ள நிலையில் இன்று வந்தவர்களிடம் மத்திய மாநில உளவுத்துறையினர், கியூ பிரிவு போலீசார் மற்றும்  கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com