முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை... கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை...

தேனி மாவட்டம் பெரியகுளம் சோத்துப்பாறை அணையின் முழு கொள்ளவான  126.28 எட்டி நிறைந்ததால் வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணை... கரையோர கிராமங்களுக்கு அபாய எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மழையை ஒட்டி உள்ள சோத்துப்பாறை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தென் மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாது போனதால் அணைக்கு நீர் வரத்து முற்றிலும் இல்லாமல் போனது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர் வரத்து துவங்கியது. இந்நிலையில் நேற்று முந்தினம் அணையின் முழு கொள்ளவான 126.28 அடியில்  121.28 அடியை எட்டியது.  இரண்டே நாளில் 5 அடி உயர்ந்து  இன்று காலையில் அதன் முழு கொள்ளவான 126.28 அடியை எட்டியது.

இதனை தொடர்ந்து பெரியகுளம், வடுகபட்டி, மேலங்களம், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டுகின்றது. அணைக்கு தற்பொழுது 51 கன அடியாக உள்ள நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com