தமிழக மீனவர்களை துப்பாக்கிசூடு நடத்தி விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டுழியம்...

மன்னார்வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி விரட்டியடித்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தமிழக மீனவர்களை துப்பாக்கிசூடு நடத்தி விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டுழியம்...
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம்  மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த  இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த மீனவர்கள் ஒன்பது பேர், பாதுகாப்பாக கரை  திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையின் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள மீனவ மக்கள், இதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com