அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் போராட்டம் - சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அக்னிபாத் திட்டத்திற்கு வலுக்கும் போராட்டம் - சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் சூழ்நிலையில் சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் சேருவதற்கு புதிய திட்டமாக அக்னிபாத் அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வலுத்து வருகிறது.

அதன் ஒரு தொடர்ச்சியாக நேற்று, சென்னை தலைமை செயலகம் அருகே போர் நினைவுச் சின்னத்தின் அருகாமையில் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இதுபோன்று போராட்டம் நடைபெறாமல் இருக்க மெரினா மற்றும் தலைமைச் செயலகத்தை சுற்றியுள்ள சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு பொது போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com