T.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் வழக்கு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

தமிழகத்தின் டீ.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
T.கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தல் வழக்கு - உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டம் டீ-கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயச்சை வேட்பாளருமான பழனிச்செல்விவையும் தலா 284 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர்.

இதனையடுத்து குலுக்கல் முறையில் முதலில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் திமுக கவுன்சிலரின் வெற்றி ரத்து செய்யப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com