பிக் ஃபாதர் கருணாநிதியாலேயே முடியவில்லை...ஸ்மால் பாய் உதயநிதியால் என்ன செய்ய முடியும்!

பிக் ஃபாதர் கருணாநிதியாலேயே முடியவில்லை...ஸ்மால் பாய் உதயநிதியால் என்ன செய்ய முடியும்!
Published on
Updated on
1 min read

சனாதனத்தை அமைச்சர் உதயநிதி கையில் எடுத்திருப்பது திசை திருப்பும் முயற்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் அதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஒரே நாடு ஒரே தேர்தலில் கொண்டு வருவது நல்ல விஷயம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவை அழிப்பது கருணாநிதியாலேயே முடியவில்லை என்றும், உதயநிதியால் மட்டும் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். 

மேலும், சனாதனத்தை அமைச்சர் உதயநிதி கையில் எடுத்திருப்பது திசை திருப்பும் முயற்சி என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com