திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி ஏரிக்கரையில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இறச்சிக்கடை அமைக்கப் போவதாக துரிஞ்சாபுரம் கிராம நிர்வாக அலுவலருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.