நான்கு மாவட்டங்களில் 2-ம் நாளாக இன்றும் முதலமைச்சர் ஆய்வு...!

Published on
Updated on
1 min read

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் வளா்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் 2-ம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் துறை ரீதியாக ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாகவும், சட்டம் ஒழுங்கு தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2 நாட்கள் ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கியது. 

இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கள ஆய்வு  கூட்டத்தில் 4 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இதில்  வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், போதை பொருட்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். போதை பொருட்கள் தடுப்பு  நடவடிக்கையில் எவ்வித சமரசமும் செய்ய கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில், பலதுறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியா்களுடன் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com