அதிமுக - பாஜக இடையே மோதல் இல்லை...விளக்கமளித்த ஜெயக்குமார்!

அதிமுக - பாஜக இடையே மோதல் இல்லை...விளக்கமளித்த ஜெயக்குமார்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக இடையே மோதல் இல்லை என்றும், பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


சென்னை ராயப்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு இல்லை என்றும், பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்றும் கூறினார். 

ஓ.பி.எஸ். கட்சி நடத்தவில்லை கடை நடத்துகிறார் என்று கூறிய அவர், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் தவிர மற்றவர்கள் வந்தால் அவர்களை தாயுள்ளத்துடன் அதிமுகவுடன் இணைத்துக் கொள்ள தயார் எனவும் தெரிவித்தார். 

முன்னதாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதிமுக - பாஜக இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில் அண்ணாமலை குறித்து எந்த விதமான கருத்துக்களையும் அதிமுகவினர் தெரிவிக்க வேண்டாம் என்றும், ஒரு மாத காலத்திற்குள் பொது செயலாளர் தேர்தலுக்கான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com