தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேதாந்தா நிறுவனம் கோரிக்கை!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேதாந்தா நிறுவனம் கோரிக்கை!!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு விசாரணை இரண்டுமுறை பட்டியலிடப்பட்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள உச்சநீதிமன்றம் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விசாரிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றும் அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது நிச்சயம் எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வரும் 15ஆம் தேதி வழக்கு பட்டியலிடப்பட்ட இருப்பதால் அன்றைய தினம் கட்டாயம் விசாரிக்க வேண்டும் என்றும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடக்கூடாது எனவும் வேதாந்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கு, பதிலளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அன்றைய தினம் நிச்சயம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com