அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை...!

அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை...!
Published on
Updated on
1 min read

கோயில் நிலங்களை மீட்பதில் ஒத்துழைக்க மறுக்கும் அதிகாரிகள் சிறை செல்ல நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. 

திருச்சி , உய்யக்கொண்டானில், தருமபுர ஆதீனத்திற்க்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் நிலங்கள் மீட்பது குறித்து அதிகாரிகள் ஒத்துழைக்க மறுத்தால் சிறை செல்ல நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், மீட்கப்பட்ட மற்றும் மீட்கப்பட வேண்டிய கோயில் சொத்துக்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com