முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு...!

Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவை ஒட்டி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா, இன்று ஆன்மீக விழாவாகவும், 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும், 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

இதனை அடுத்து  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள்  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில் தங்க கவசம் அணிவிக்கப்பட்ட முத்துராமலிங்க தேவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com