மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறை முடிவு!!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்... ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுக்க காவல்துறை முடிவு!!
Published on
Updated on
1 min read

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜகோபாலன், 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், வரும் ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் உள்ள ராஜகோபாலனை, 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக இன்று நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com