தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீள முடியும்... உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனா தொற்றில் இருந்து மீள முடியும் என சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவில் இருந்து மீள முடியும்...  உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!
Published on
Updated on
1 min read

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், சென்னை அண்ணா சாலையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவ துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும், கொரோனா தொற்றில் இருந்து மீள அதுவே சிறந்த வழி என்றும் கூறினார். மேலும் திரை துறையை சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளை முதல்வர் நிச்சயமாக செய்வார் என்றும் கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com