தாடியுடன் இருந்த வைகை செல்வன்.. கனிவுடன் விசாரித்த ஓ.பி.எஸ்..

தாடியுடன் இருந்த வைகை செல்வனை எதற்காக என்று விசாரித்தார் ஓ.பன்னீர்செல்வம்.
தாடியுடன் இருந்த வைகை செல்வன்.. கனிவுடன் விசாரித்த ஓ.பி.எஸ்..
Published on
Updated on
1 min read
அதிமுகவில் எல்லா தலைவர்களிடமும் நல்ல மதிப்பை பெற்று வருபவர் வைகை செல்வன்.  அவரது எழுத்துக்களுக்கு ஒரு வாசகர் கூட்டமே உள்ளது. தன்னுடைய கருத்துக்களை அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் எடுத்து முன்வைக்கக்கூடியவர்.
2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை  தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் மறுபடியும் களம் கண்ட அவர், ஏற்கனவே வெற்றி பெற்ற நீங்கள் தொகுதிக்கு என்ன நல்லது செய்தீர்கள் என்ற மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார். இந்த தேர்தலிலும் வைகைசெல்வன் தோற்றுவிட்டார். 
தற்போது கட்சி நடவடிக்கைகளில் அதிகமாக கலந்து கொள்ளாத வைகை செல்வன் சமீப காலமாக முகத்தில் தாடி வைத்து காணப்படுகிறார். இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், வைகைச்செல்வனும் மதுரை ஏர்போர்ட்டில் பேசி கொண்டிருந்தனர். அப்போது ஓபிஎஸ், வைகைசெல்வனின் தாடியை பார்த்து, என்னாச்சு? எதற்கு தாடி என்று கனிவுடன் விசாரித்தார். அதற்கு வைகைச்செல்வன் "சும்மாதான் வெச்சிருக்கேன்" என்று ஓபிஎஸ்ஸுக்கு பதிலளித்தார்.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com