வலுவிழக்கும் மாண்டஸ்...அடுத்த 3 நாட்களுக்கு மழையாம்...!

வலுவிழக்கும் மாண்டஸ்...அடுத்த 3 நாட்களுக்கு மழையாம்...!
Published on
Updated on
1 min read

மாண்டஸ் புயல் படிப்படியாக கரையை கடக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமானமழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 நாட்களுக்கு மழை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், மாண்டஸ் என்ற தீவிர புயலாக வலுப்பெற்று சென்னையின் தென்கிழக்கே மையம் கொண்டு புயலாக வலுவிழந்தது.

தொடர்ந்து உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்துவரும் நிலையில், இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் இன்று முதல் 13ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பொழியும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com