தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா? நடக்காதா? இன்று வெளியாகும் அறிவிப்பு

தமிழகத்தில் +2 தேர்வு நடக்குமா? நடக்காதா? இன்று வெளியாகும் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

மத்திய அரசு CBSE மாணவர்களுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்துள்ள நிலையில் தமிழகத்தில் மாநில பாட திட்டத்தின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது தொடர்பாக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள் என அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துக்களை பெற மின்னஞ்சல் முகவரியான tnschooledu21@gmail.com என்ற முகவரிக்கு கருத்துக்களை பகிரலாம் எனவும், 14417 என்ற எண்ணுக்கு அழைத்தும் ஆசிரியர்கள் மாணவர்கள் ,பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்த நிலையில் கடந்த இரு தினங்களாக கருத்துகள் பெறப்பட்டு வருகிறது. அதில் 60% பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என கருத்து தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியது.

அதன் தொடர்ச்சியாக, இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ககர்லா உஷா, ஆணையர் நந்தக்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com