தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? இன்று ஆலோசனை

வரும் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் வருமா? இன்று ஆலோசனை
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது.  

இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? என்பது குறித்து தலைமை செயலகத்தில் இன்று காலை 11  மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கை மேலும் நீட்டிப்பது அல்லது தளர்வுகள் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com