உலக வில்வில்தை போட்டி; 2 தங்கங்களை வென்ற இந்திய வீரர்கள்!

உலக வில்வில்தை போட்டி; 2 தங்கங்களை வென்ற இந்திய வீரர்கள்!
Published on
Updated on
1 min read

உலக வில்வில்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த நடந்த ஆடவருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஓஜாஸ் பிரவீன் டியோடேல் 150-149 என்ற புள்ளி கணக்கில் போலந்தின் லூகாஸ்சை பிரிப்ஸ்கியை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் 21 வயதான ஓஜாஸ் பிரவீன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார்.

இதேபோல் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி 149-147 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். இதன் மூலம் அதிதி உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியின் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 

மேலும், அரையிறுதியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான ஜோதி சுரேகா வென்னம் 150-146 என்ற புள்ளி கணக்கில் துருக்கியின் இபெக் டாம்ருக்கை தோற்கடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com