ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை!

ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் விடுதலை!
Published on
Updated on
1 min read

இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி  துறைமுகத்திலிருந்து நேற்று சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகு  இஞ்சின் கோளாறு காரணமாக நெடுந்தீவு அருகே உள்ள பாறை பகுதியில் சிக்கியுள்ளது.

இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற இலங்கை கடற்படை படகில் இருந்த ஒன்பது ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து விசாரணைக்காக கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது.  இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களையும் இலங்கை கடற்படை நீரியல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து ஒன்பது மீனவர்களையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதில் மீனவர்கள் ஒன்பது பேரையும் இலங்கை நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தமிழ்நாடு வந்தடைவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com