
இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள், குடும்பங்கள், தங்கள் வாழ்க்கையை உயர்த்த, புது வாய்ப்புகளை தேடி, அமெரிக்கா பயணிக்கிறாங்க. H-1B விசா, கிரீன் கார்டு, மாணவர் விசா - இப்படி பல வழிகளில் அமெரிக்காவில் குடியேறி, உழைச்சு, தங்கள் உறவுகளுக்கு, குடும்பத்துக்கு இந்தியாவுக்கு பணம் அனுப்புறது வழக்கம். ஆனா, இப்போ இந்த பயணத்துக்கு ஒரு பெரிய சவால் வந்திருக்கு - "The One Big Beautiful Bill"னு சொல்லப்படுற ஒரு புது மசோதா மூலம் இந்த சிக்கல் வந்திருக்கு,
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகப்பெரும் பயத்தை கொடுத்திருக்கு இந்த "The One Big Beautiful Bill". இந்த மசோதா, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்போட இரண்டாவது ஆட்சியில், அவரோட பொருளாதார கொள்கைகளை முன்னெடுக்குற ஒரு பெரிய திட்டத்தோட பகுதி.
இந்த மசோதாவை, அமெரிக்க நாடாளுமன்றத்தோட House Ways and Means Committee முன்மொழிந்திருக்கு. இதோட முக்கிய அம்சம், அமெரிக்க குடிமக்கள் இல்லாதவர்கள் (non-citizens) - அதாவது H-1B விசா, L-1 விசா, கிரீன் கார்டு வைத்திருக்குறவங்க, மாணவர் விசாவில் இருக்குறவங்க - வெளிநாடுகளுக்கு அனுப்புற பணத்துக்கு 5% வரி விதிக்குறது.
இந்த மசோதா, மே 26, 2025ல நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படப் போகுது. இது சட்டமாக மாறினா, ஜூன் அல்லது ஜூலை 2025ல இருந்து இந்த வரி அமலுக்கு வரலாம். இந்த மசோதாவோட நோக்கம், அமெரிக்க பொருளாதாரத்தை பலப்படுத்துறதும், உள்நாட்டு வருவாயை அதிகரிக்குறதும்னு சொல்லப்படுது. ஆனா, இது அமெரிக்காவில் உழைக்குற இந்தியர்களோட கனவுகளுக்கு ஒரு பெரிய அடியா இருக்கப் போகுது.
அமெரிக்காவில் இருக்குற இந்தியர்கள், ஒவ்வொரு வருஷமும் இந்தியாவுக்கு சுமார் 32 பில்லியன் டாலர்களை அனுப்புறாங்க. இது, இந்தியாவோட பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய பலம். இந்தப் பணம், குடும்பங்களோட அன்றாட செலவுகள், கல்வி, மருத்துவம், முதலீடுகள், சொத்து வாங்குறது மாதிரி பல விஷயங்களுக்கு உதவுது. ஆனா, இந்த மசோதா 5% வரி விதிச்சா, இந்தியர்கள் ஒவ்வொரு வருஷமும் 1.6 பில்லியன் டாலர்களை வரியா இழக்க வேண்டியிருக்கும்.
இதை ஒரு உதாரணத்தோட புரிஞ்சுக்கலாம். ஒரு H-1B விசா வைத்திருக்குற இந்தியர், தன்னோட பெற்றோருக்கு மாசம் 1,000 டாலர் அனுப்புறார்னு வச்சுக்கோங்க. இந்த மசோதா சட்டமாச்சுனா, ஒவ்வொரு மாசமும் 50 டாலர் வரியா போகும். வருஷத்துக்கு 600 டாலர், 10 வருஷத்துக்கு 6,000 டாலர்! இது ஒரு நடுத்தர குடும்பத்துக்கு ஒரு பெரிய இழப்பு. இப்படி லட்சக்கணக்கான இந்தியர்கள் இந்த வரியால பாதிக்கப்படுவாங்க.
இந்த வரி, குறிப்பா H-1B, L-1 விசா வைத்திருக்குறவர்கள், கிரீன் கார்டு வைத்திருக்குறவர்கள், மாணவர் விசாவில் இருக்குறவர்களை பாதிக்கும். இந்தியாவுக்கு அனுப்புற பணம் மட்டுமல்ல, இந்திய பங்குச் சந்தையில முதலீடு செய்யுறது, ரியல் எஸ்டேட் வாங்குறது மாதிரி பிற முதலீடுகளுக்கும் இந்த வரி பொருந்தும். இது, இந்தியர்களோட நிதி திட்டமிடலை பெரிய அளவுல பாதிக்கும்.
ட்ரம்போட ஆட்சி, அமெரிக்காவோட பொருளாதாரத்தை "America First" கொள்கையோட முன்னெடுக்க முயற்சி செய்யுது. இதோட ஒரு பகுதியா, வெளிநாட்டு தொழிலாளர்கள், குடியேறியவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முயற்சி செய்யுது. இந்த 5% வரி, அமெரிக்க குடிமக்கள் இல்லாதவர்களை குறிவைக்குற ஒரு முயற்சியா பார்க்கப்படுது.
இதே சமயம், இந்தியாவும் அமெரிக்காவோட வர்த்தக உறவுகளை பலப்படுத்த முயற்சி செய்யுது. 2024ல, இந்தியாவும் அமெரிக்காவும் 129 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்திருக்கு, இதுல இந்தியாவுக்கு 45.7 பில்லியன் டாலர் வர்த்தக உபரி (trade surplus) இருக்கு. ட்ரம்ப், இந்தியாவோட உயர்ந்த வரி விதிப்புகளை (tariffs) குறைக்க வேண்டும்னு வலியுறுத்தி, ஒரு புது வர்த்தக ஒப்பந்தத்தை பேசி வராரு. இந்த மசோதா, இந்த பேச்சுவார்த்தைகளோட ஒரு அழுத்தமா (leverage) பயன்படுத்தப்படலாம்னு பலர் கருதுறாங்க.
ஆனா, இந்த மசோதா இன்னும் சட்டமாகலை. இது நாடாளுமன்றத்தில் நிறைவேறணும், அதுக்கு பிறகு செனட்டில் (Senate) ஒப்புதல் பெறணும். இந்த செயல்முறை, பல மாசங்கள் எடுக்கலாம். இதனால, இந்தியர்கள் இப்போதைக்கு கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம், ஆனா எதிர்காலத்துக்கு தயாராக இருக்கணும்.
இந்த மசோதா, அமெரிக்காவில் இருக்குற இந்தியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்துக்கும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இருந்து வர்ற 32 பில்லியன் டாலர், இந்தியாவோட வெளிநாட்டு நாணய கையிருப்புக்கு (foreign exchange reserves) ஒரு பெரிய பங்கு. இந்தப் பணம் குறைஞ்சா, இந்தியாவோட பொருளாதார வளர்ச்சி, குறிப்பா கிராமப்புற பொருளாதாரம், பாதிக்கப்படலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்