கடந்த 2011 ஆம் ஆண்டு, மே மாதம் 2 ஆம் தேதி, பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர், அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். அப்போது ஒசாமா அங்குப் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது. தீவிரவாதத்துக்கான நிதியுதவியை தடுக்கும் சர்வதேச அமைப்பு பாகிஸ்தானை தொடர்ந்து கிரே பட்டியலில் வைத்திருக்கும் நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.