பிற நாடுகளில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதா பாகிஸ்தான்?!!!

பிற நாடுகளில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டதா பாகிஸ்தான்?!!!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி குறித்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர்.

பாகிஸ்தான் அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.  பாகிஸ்தான் தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் முன் கைகளை நீட்டி, பொருளாதார நெருக்கடிக்காக கூக்குரலிட்டு வருகிறது.   இதற்கிடையில், ஒரு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரு வணிக நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, ​​கடனுக்காக IMF உடன் பேசியதாக கூறியுள்ளார். கடனுக்காக கிறிஸ்டலினா ஜார்ஜிவாவுடன் தொலைபேசியில் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் பொருளாதார நிலை என்ன என்பதை அறிய சர்வதேச நாணய நிதியம் ஒரு தூதுக்குழுவை அனுப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.  மேலும் அவர்களது மக்கள் மீது அதிக சுமையை சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.  அதே நேரத்தில், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் பிரதிநிதிகள் குழு வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com