ஜோ பைடனுக்கு இந்த நிலைமையா? அமெரிக்க படைகளை திரும்ப பெற்றது காரணமா?    

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளதாக, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் வெளியாகி உள்ளது.
ஜோ பைடனுக்கு இந்த நிலைமையா? அமெரிக்க படைகளை திரும்ப பெற்றது காரணமா?      
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளதாக, அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பொறுப்பு ஏற்ற சமயத்தில், கொரோனா வைரசின் கோரப்பிடியில் அமெரிக்கா சிக்கி தவித்தது. அவரது நிர்வாகத்தால் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இதனால் பதவிக்கு வந்த 3 மாத காலத்தில், அமெரிக்க மக்களிடம் ஜே பைடனின் செல்வாக்கு கணிசமாக அதிகரித்தது. ஆனால் தற்போது ஜோ பைடனின் செல்வாக்கு கடுமையாக சரிவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நடத்திய கருத்து கணிப்பில், முதல் 3 மாதங்களில் ஜோ பைடனின் செல்வாக்கு 56 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது 44 புள்ளி 7 சதவீதமாக சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-ம் உலகப்போருக்கு பின்னர் எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இப்படி ஒரு சரிவை சந்தித்தது இல்லை என, கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது மற்றும் குழப்பமான சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப பெற்றது போன்ற காரணங்களால் ஜோ பைடனின் செல்வாக்கு சரிந்ததாக கருதப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com