
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் வடகொரியா எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக உருவாக்கப்பட்ட புதிய வகை நீண்ட தூர பயண ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.