தலிபானின் ரூட் கிளியர்: பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து பஞ்ச்ஷிர் போராளிகள் தலிபான்களிடம் பணிந்தனர்...

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தலிபான் எதிர்ப்பு பஞ்ச்ஷிர் போராளிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலிபானின் ரூட் கிளியர்: பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து பஞ்ச்ஷிர் போராளிகள் தலிபான்களிடம் பணிந்தனர்...
Published on
Updated on
1 min read

34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் 33 மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். ஆனால் ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ள பாஞ்ச்ஷிர் மாகாணம், தேசிய எதிர்ப்பு முன்னணி என்ற அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

 ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க தலிபான்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில் அவர்களுக்கு பாஞ்ச்ஷிர் மாகாணம் ஒரு தலைவலியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து, பாஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினருடன் ஏற்பட்ட மோதலில் 600 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

 இந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தேசிய எதிர்ப்பு முன்னணி படையினர் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்களின் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்பட்டதை தொடர்ந்து தேசிய எதிர்ப்புப் படையினர் பணிந்துள்ளனர். பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் தலிபான்களுக்கு தேசிய எதிர்ப்பு முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com