EXCLUSIVE: "தைவானை பிடித்தால் உலகமே காலடியில்!" - சீனா மற்றும் அமெரிக்கா மோதலுக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி உண்மை!

தைவான் ஒரு நாடா என்று கேட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பார்வையில் அது ...
China–US Showdown
China–US Showdown
Published on
Updated on
2 min read

தொகுப்பாளர்: மாலைமுரசு நேயர்களுக்கு வணக்கம். 'ஒரு செய்தி பல கோணங்கள்' நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். அமெரிக்கா தைவானுக்கு உதவி செய்வதால், சீனா அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்குத் தடை விதித்துள்ளது. இது குறித்து இன்று நம்மிடம் பேச பொருளாதார நிபுணர் முனைவர் பிரபாகரன் அவர்கள் இணைந்துள்ளார். வணக்கம் சார்.

முனைவர் பிரபாகரன்: வணக்கங்க ஐயா.

தொகுப்பாளர்: சார், அமெரிக்கா தொடர்ந்து தைவானுக்கு உதவி செய்துகொண்டே இருக்கிறது. தைவான் பிரச்சனை ஏன் இவ்வளவு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது? சீனா ஏன் அமெரிக்க நிறுவனங்கள் மீது தடை விதித்துள்ளது? இதை எந்தப் புள்ளியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்?

முனைவர் பிரபாகரன்: இது ஒரு நல்ல தலைப்பு. தைவான் ஒரு நாடா என்று கேட்டால், ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பார்வையில் அது ஒரு நாடு கிடையாது. 1948-ல் சீனாவில் புரட்சி நடந்தபோது அங்கிருந்த மன்னர்களும், பணக்காரர்களும் தைவானுக்குச் சென்றனர். அவர்கள் வரும்போதே நிறைய தங்கம் மற்றும் பொருட்களைக் கொண்டு வந்தனர். அங்கிருந்து அவர்கள் தனி நாடாகச் செயல்பட ஆரம்பித்தனர். 1950-ல் கொரியப் போரின்போது அமெரிக்கா அவர்களுக்கு ஆதரவு அளித்தது.

தொகுப்பாளர்: தைவானின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது?

முனைவர் பிரபாகரன்: தைவான் கேரளாவை விடச் சிறிய நிலப்பரப்பு கொண்ட நாடு. வெறும் 2.5 கோடி மக்கள்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 808 பில்லியன் டாலர்! தனிநபர் வருமானம் 34,000 டாலர். இந்தியாவோடு ஒப்பிட்டால் நாம் 2,200 டாலர் அளவில் தான் இருக்கிறோம்.

தொகுப்பாளர்: எப்படி இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டினார்கள்?

முனைவர் பிரபாகரன்: உலகத்தில் தயாரிக்கப்படும் கணினி சிப்களில் (Computer Chips) 50% தைவானில் தான் தயாராகின்றன. குறிப்பாக TSMC என்ற ஒரு கம்பெனி அங்குள்ளது. அந்தத் தொழில்நுட்பம் உலகில் வேறு யாரிடமும் இல்லை. எனவே தைவானைக் கைப்பற்றினால், உலகத்தின் மொத்த 'சிப்' மையத்தையும் கைப்பற்றியது போலாகும்.

தொகுப்பாளர்: அமெரிக்கா ஏன் இவ்வளவு உதவி செய்கிறது?

முனைவர் பிரபாகரன்: அமெரிக்கா சீனாவை ஒரு பொருளாதாரப் போட்டியாளராகப் பார்க்கிறது. சீனா இன்று புதுமையான தொழில்நுட்பங்களில் மிக முன்னணியில் உள்ளது. குறிப்பாக 'ரேர் எர்த்' (Rare Earth) எனப்படும் தாதுக்கள் 90% சீனாவில் தான் உள்ளன. மின்சார உற்பத்தி முதல் மேக்னடிக் ரயில்கள் வரை சீனா உலகை முந்திக்கொண்டு ஓடுகிறது. இதனால்தான் அமெரிக்கா தைவானுக்கு ஆயுத உதவிகளைச் செய்து சீனாவைக் கட்டுப்படுத்த முயல்கிறது.

தொகுப்பாளர்: இதனால் இந்தியாவிற்கு என்ன தாக்கம் ஏற்படும்?

முனைவர் பிரபாகரன்: நாமும் இப்போது சிப் தொழிற்சாலைகளை இந்தியாவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்குத் தூய்மையான தண்ணீர், தடையில்லாத மின்சாரம் மற்றும் நல்ல காற்றின் தரம் தேவை. தமிழ்நாட்டில் இதற்கான சிறந்த சூழல் உள்ளது. டாட்டா நிறுவனம் போன்ற பெரிய நிறுவனங்கள் இதில் முதலீடு செய்கின்றன. இதன் மூலம் நாமும் சிப் உற்பத்தியில் தன்னிறைவு பெற வாய்ப்புள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com