கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளி...!

கால்நடைகளுக்கு உணவாகும் தக்காளி...!
Published on
Updated on
1 min read

தெலங்கானா மாநிலத்தில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்த தக்காளியை விவசாயிகள் குப்பை தொட்டியில் கொட்டியுள்ளனர். இதையடுத்து சேதம் அடைந்த தக்காளிகளை, விவசாயிகள் கால்நடைகளுக்கு உணவாக அளிக்க குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பியுள்ளனர். 

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து சந்தையில் குறைந்ததால் அதன் மதிப்பு  ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கும் மேல்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தக்காளி பயிரிட்ட விவசாயிகளில் பலர்  சில வாரங்களில் கோடீஸ்வரர்களாக மாறிய நிலையும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தாங்கள் விளைவித்த தக்காளி பயிரின் மூலம் பல லட்சம் சம்பாதிக்கலாம் என ஆசையாக  முதலீடு செய்து பயிரிட்டிருந்த  விவசாயிகளுக்கு கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக தக்காளிகள் சேதம் அடைந்துள்ளது . 

இதனால் வாரங்களில்  சந்தைக்கு வரும் தக்காளி  வரத்தும் அதிகரித்துள்ள நிலையில் விலை குறைந்து வரக்கூடிய சூழலில்,  மழையால் சேதம் அடைந்த தக்காளிகளை கால்நடைகளுக்கு உணவாக அளிக்க குப்பை வண்டியில் ஏற்றி அனுப்பக்கூடிய நிலைக்கு  விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com