10 % இடஒதுக்கீடு: ஆதரவும் எதிர்ப்பும்!! உச்சநீதிமன்ற அமர்வின் பரப்பரப்பு தீர்ப்பு!!

”தனியார் நிறுவனங்களில் இடஒதுக்கீடு மீறப்படவில்லை; அந்நிறுவனங்கள் சமூகத்தில் மாநிலங்கள் வழியாக வளங்களை உருவாக்குகின்றன”

10 %  இடஒதுக்கீடு: ஆதரவும் எதிர்ப்பும்!!  உச்சநீதிமன்ற அமர்வின் பரப்பரப்பு தீர்ப்பு!!

பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

ஓபிசி இடஒதுக்கீடு:

கடந்த 2019ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இயற்றப்பட்டது. மத்திய அரசின் இந்த முடிவானது அரசமைப்பு சட்டத்திற்கு புறம்பானது என தொடர்ந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. 

EWS ஒதுக்கீட்டின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை உச்சநீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல மனுக்கள் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 27 அன்று தீர்ப்பை ஒத்திவைத்தது. 

1953ல் அமைக்கப்பட்ட குழு:

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து கருத்து அறிய, 1953 இல் காகா கலேக்கர் குழு அமைக்கப்பட்டு, 10% இடஒதுக்கீடு தேவையில்லை என்ற கருத்து முன் வைக்கப்பட்டது அப்போதே முன்வைக்கப்பட்டது.

தீர்ப்பின் ஆதரவும் எதிர்ப்பும்:

இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுஅதன் மீதான விசாரணை ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு யு லலித் ஓய்வு பெறும் நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆதரவான நீதிபதிகள்:

தினேஷ் மகேஸ்வரி, திரிவேதி, பர்திவாலா ஆகிய மூன்ற நீதிபதிகள் 10% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆதரவிற்காக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்:

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்த நீதிபதிகளின் வாதங்களை பின்வருமாறு காணலாம்.

நீதிபதி தினேஷ் மகேஷ்வரி:

103வது அரசியல் சீர்திருத்த திட்டம் 50 சதவீத இடஒதுக்கீட்டை மீறவில்லை எனக் கூறி இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு சேர்த்துள்ளார்.  

இந்திய அரசியலமைப்பின் விதிப்படி இடஒதுக்கீடானது 50 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதி திரிவேதி:

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான நலனுக்காகவே இந்த ஒதுக்கீடு என்பது மறுக்கமுடியாது எனவும் 103வது சட்டத்திருத்தம் EWS என்ற தனிவகுப்பை உருவாக்குகிறது எனவும் இது அரசியலமைப்பை மீறுகிறது எனக் கூற முடியாது எனவும் கூறியுள்ளார் திரிவேதி.

தொடர்ந்து பேசிய திரிவேதி 103-வது அரசியல் சட்டத்திருத்த செல்லும் எனவும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் ஆங்கிலோ இந்தியர்களுக்கான இடஒதுக்கீடு முடிவுக்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இடஒதுக்கீடு என்பது முடிவு அல்ல எனவும் அது உள்நோக்கத்துடன் மாற கூடாது  எனவும் கூறியுள்ளார்.

நீதிபதி பர்திவாலா:

காலக்கெடு இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்கிக் கொண்டே இருக்க முடியாது என பர்திவாலா கூறியுள்ளார்.

எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்:

10 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான யு யு லலித்தும் நீதிபதி ரவீந்திர பட்டும் எதிராகவே வாதிட்டனர்.

நீதிபதி ரவீந்திர பட்:

நமது இந்திய அரசியல் அமைப்பு விதி விலக்கை அனுமதிக்காது எனவும் இந்த சட்டத்திருத்தம் சமூக நீதியின் கட்டமைப்பை குறை மதிப்பிடுகிறது  எனவும் கூறியுள்ளார் ரவீந்திர பட்.

மேலும், 103-வது சட்டத்திருத்தம் அரசியல் அமைப்பு ரீதியாக பாகுபாட்டை தடை செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், அனைவரும் சமம் என்ற சமத்துவத்தின் இதயத்தை உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குத்திக்கிழிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

தீர்ப்பு என்ன?:

உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் முடிவில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 3-2 என்ற வித்தியாசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:     சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்...குற்றப்பத்திரிக்கையுடன் புல்லட் தியரியையும் தாக்கல் செய்த காங்கிரஸ்...