சாமியாரின் வருகையால் மனம் திருந்திய பாரதி!!என்னா நடிப்புடா சாமி...பாரதி கண்ணமா சீரியலை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...

கதைகளத்தையே டுவிஸ்டாக மாற்றிய சாமியார்...

சாமியாரின் வருகையால் மனம் திருந்திய பாரதி!!என்னா நடிப்புடா சாமி...பாரதி கண்ணமா சீரியலை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...

பொதுவாக டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு குடும்ப இல்லத்தரசிகள் அனைவரும் அடிமையாக விட்டனர். அதனால் தான் என்னவோ தெரியவில்லை டிவி சீரியல்களை ஒரு சின்ன கதையை வைத்து சவ்வாக இழுத்துக்கொண்டு வருகிறார்கள். இதனைப் பார்க்கும் நெட்டிசன்கள் தனக்கு கிடைத்த பாயாசம் போல் நினைத்து செம்மயாக கலாய்த்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சிரியல் மக்களை கவர்ந்த நாடகமாக இருக்கும் நிலையில், அதில் வரும் பாரதி கேரக்டரை வச்சு கலாய்த்து வருகின்றனர் நம்ம நெட்டிசன்கள். 

டிவி சேனல்களில் ஒளிப்பரப்பாகும் எந்த சீரியலிலும் ஹீரோ கதாபாத்திரம் ரசிகர்களிடம் இவ்வளவு திட்டு வாங்கியது இல்லை.  அதற்கு நேர் மாறாக பாரதி கண்ணம்மா சீரியலின் ஹீரோவான டாக்டர் பாரதி கதாபாத்திரத்தை திட்டி தீர்க்காத ரசிகர்களே இல்லை எனலாம். 

கண்ணம்மாவை சந்தேகப்பட்டதில் இருந்து, அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பியது, வில்லி வெண்பாவை நம்புவது, அவருக்கு துணையாக செல்வது என பாரதியின் எல்லா முடிவுகளையும் சீரியல் ரசிகர்கள் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

சீரியலின் ஹீரோவே பாரதி தான் என்றாலும்  கண்ணம்மாவுக்கு எதிராக செயல்படும் போது அந்த கேரக்டரையே ரசிகர்கள் திட்ட தயாராகி விடுகின்றனர். இதுவும் இந்த  சீரியலின் வெற்றிக்கு ஒருவித முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் மொத்த குடும்பமும் கண்ணம்மாவுக்கு ஆதரவாக இருப்பது, கண்ணம்மாவை நம்பி பாரதியை குடும்பத்தில் இருப்பவர்கள்  அனைவரும் திட்டும் போதெல்லாம் பாரதி தரும் ரியாக்‌ஷன்களை ரசிக்கவும் ஒரு கூட்டம் உள்ளது. 

ஒரு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்தால் முடிய வேண்டிய சீரியலை இயக்குனர் இப்படி சவ்வாக இழுத்துக்கொண்டு மக்களை முட்டளாக்கும் விதமாக  இத்தனை ஆண்டுகளாக கடத்தி விட்டதாக நெட்டிசன்கள் இணையத்தில் கலாய்த்து தள்ளுவதும் வழக்கம் தான். அதற்கேற்றாற்போல் தற்போது சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் விவகாரத்துக்காக 6 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருக்கின்றனர். இந்த 6 மாத காலத்தில் குடும்பத்தில் இருப்பவர்கள் யார் சொல்லியும் குணம் மாறாத பாரதி கண்ணம்மா மீது அதே வெறுப்புடன்  நடந்து கொள்வது போன்று தான் கதைக்களம் அமைந்துள்ளது. 

அப்போது தான் சீரியலில் ட்விஸ்டாக சாமியார் ஒருவர் என்ட்ரி கொடுக்கும் விதமாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் பாரதிக்கு அருள் வாக்கு சொல்வது போல் சில விஷயங்களை சொன்னார். யாரை நம்ப வேண்டும், யாரை நம்ப கூடாது, எது உண்மை, கண்ணால் பார்பதை நம்ப கூடாது. பொறுமையை, நிதானத்தை ஒருபோதும் இழக்க கூடாது என ஏகப்பட்ட விஷயங்களை சொன்னார். அதிலிருந்து பாரதியின் நடவடிக்கையில் அப்படி ஒரு மாற்றம். கண்ணம்மா மீது கோபப்படுவதையே நிறுத்தி விட்டார். அதுமட்டுமில்லை, எது உண்மை என்பதை பொறுமையாக யோசிக்கவும் தொடங்கிவிட்டார். இதுபோன்று அந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

இதுபோன்று காட்சிகள் அடங்கிய புரமோவை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் அது எப்படி டா 9 வருடங்களாக அம்மா, அப்பா, தம்பி என யார் சொல்லியும் மனம் மாறாத பாரதி ஒரே நாளில் சாமியார் சொன்னதும் திருந்தியது எப்படி? என வழக்கம் போல் சீரியலை கலாய்க்க தொடங்கி விட்டனர். மேலும், இதுபோன்று தான் ரசிகர்களை முட்டாளாக்கி வருவதாகவும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.