”தேர்தலே நோக்கம்... ஒவ்வொரு பிரிவையும்... அடிக்கப்பட்ட பழைய பறை....” பட்ஜெட்2023 எதிர்ப்பும் ஆதரவும்!!!

”தேர்தலே நோக்கம்... ஒவ்வொரு பிரிவையும்... அடிக்கப்பட்ட பழைய பறை....” பட்ஜெட்2023 எதிர்ப்பும் ஆதரவும்!!!

இந்த பட்ஜெட்டால் சாமானியர்கள், ஏழைகள் மற்றும் வேலையில்லாதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

தேர்தலே நோக்கம்:

மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இந்த பட்ஜெட் மக்களுக்கு எதிரானது என்றும் தவறாக வழிநடத்தும் பட்ஜெட் என்றும் கூறியுள்ளார்.  வரவிருக்கும் தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது எனவும் வரி விலக்கு அளிக்கப்படவில்லை எனவு, தெரிவித்துள்ளார். 

ஏமாற்றமே:

இந்த பட்ஜெட்டால் சாமானியர்கள், ஏழைகள், வேலையில்லாதவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் எனவும் ஜிஎஸ்டி என மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசு பணம் வசூலிக்கிறது, ஆனால் நமது பங்கை தருவதில்லை எனவும் அப்படிப்பட்ட அரசை நான் இன்றுவரை பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.

ஒவ்வொரு பிரிவையும்:

நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பந்தன் வங்கியின் சிஇஓ சந்திரசேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.  பட்ஜெட் ஒவ்வொரு பிரிவையும் தொட்டுள்ளது எனவும் அதன் தாக்கம் உயர்கல்வித் துறையில் காணப்படும் எனவும் கூறியுள்ளார்.  

நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்:

பெரியவர்கள் இதைப் பற்றி அதிக நம்பிக்கை வைத்திருந்தனர் எனவும் அதை நம் நிதி அமைச்சர் நிறைவேற்றியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.  மேலும் பான் கார்டை அடையாளத்தின் அடிப்படையாக மாற்றுவது பெரும் பலன் தரும் எனவும் இந்த பட்ஜெட் தொழில்துறைக்கு வளர்ச்சியை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.  

ஏதாவது ஒன்றை:

முதலீடு அதிகரிப்பதால் வேலையின்மை குறையும் எனவும் அதனால் நாடு முன்னேறும் எனவும் இந்த பட்ஜெட் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவது ஒன்றை கொடுத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஏமாற்றமே...:

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யும், நடிகருமான சத்ருகன் சின்ஹா ​​இந்த பட்ஜெட் பொது மக்களுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.  இது நடுத்தர மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது எனவும் இந்த பட்ஜெட் தொழிலதிபர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பழைய பறை:

இது தேர்தல் சார்ந்த பட்ஜெட் எனவும் இதில் மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை எனவும் கூறிய அவர் யாருக்கும் புதிய ஏற்பாடு இல்லை எனவும் அவ்வளவுதான், அரசு பழைய பறை அடித்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பொது இடத்தில் நடனமாடி சிறைத் தண்டனை பெற்ற ஜோடி!!!