என்னை மிரட்டினால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஓ.பி.எஸை எச்சரித்த ஆர்.பி.உதயகுமார்!

என்னை மிரட்டினால் அதன் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் - ஓ.பி.எஸை எச்சரித்த ஆர்.பி.உதயகுமார்!

என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்... நேற்று கோவை செல்வராஜ் ஆர்.பி.உதயகுமார் குறித்து பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர்  பேசி  வீடியோ வெளியிட்டுள்ளார்.

ஆர்.பி.உதயகுமார் குறித்து நேற்று கோவை செல்வராஜ் பேசியது:

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் 5ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள சொத்துக்கு எப்படி அதிபதி ஆனார் என்று கேள்வி எழுப்பிய அவர் , அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான பட்டியலையும் கொடுக்கவிருப்பதாகவும் கூறினார். மேலும் ஆர்பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் வரும் திங்கட்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறையினரை சந்தித்து ஆர்பி.உதயகுமாரின் மீது சொத்துகுவிப்பு வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்த பட்டியலை அவர்களிடம் கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கோவை செல்வராஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட ஆர்.பி.உதயகுமார்:

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வீடியோ  ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அதிமுகவின் வரலாறு தெரியாத கோவை செல்வராஜ் போன்ற வடிகட்டிய முட்டாளை வைத்துக்கொண்டு தலைமை தாங்கும் ஒ.பன்னீர்செல்வத்தின் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. அதிமுக துவங்கிய காலம் தொட்டு கட்சியின் கொள்கைக்காக  உழைத்த குடும்பம் தங்களது குடும்பம் என்ற வரலாறு கைக்கூலியாக உள்ள கோவை செல்வராஜ் போன்றவர்களுக்கு தெரியாது.

மதுரை சட்டக்கல்லூரியில் பயின்றபோது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக செமஸ்டர் தேர்வு எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றது அம்மா அவர்களின் கவனத்திற்கு சென்று தன்னை மாணவர் அமைப்பில் பணியாற்ற ஆணையிட்டதாக கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எச்சரிக்கை விட்ட ஆர்.பி.உதயகுமார்:

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தொண்டர்களின் உழைப்பால் உயர்ந்து, தொண்டர்களின் எதிர்காலம் என்னவானாலும் பரவாயில்லை அதிமுகவை அழிப்பேன் என சூளுரைத்து செயல்படும் ஒ.பன்னீர்செல்வம் அவர்களே உதயாகுமாரை சீண்டி பார்க்க வேண்டாம், பயமுறுத்தவும் வேண்டாம், சொத்து சேர்த்துள்ளதாக மிரட்டி பார்க்க வேண்டாம், திறந்த கதவோடு எத்தகைய  சோதனைக்கும் தயாராக உள்ளேன் என்று அதிரடியாக கூறியுள்ளார். மேலும் கோவை செல்வராஜ் போன்ற கைக்கூலிகளை வைத்துக்கொண்டு ஒ.பன்னீர்செல்வம் என்னை மிரட்டி பார்த்தால் அதற்கான பின் விளைவுகளை அவர் சந்திக்க வேண்டியிருக்கும் என ஆவேசமாக மேசியுள்ளார்.

ஓ.பி.எஸ்க்கு சவால் விடுத்த ஆர்.பி.உதயகுமார்:

பொது வாழ்க்கையில் தூய்மையோடு உழைத்து கொண்டிருக்கிறேன். ஒபிஎஸ் வீட்டிலும் தனது வீட்டிலும் சொத்து குவிப்புகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை  ஒரே நேரத்தில் சோதனை நடத்தட்டும், அப்படி ஒருவேளை தனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் தான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன், அதேபோன்று நீங்கள் சொத்து குவித்ததாக அறிந்தால் பொது வாழ்க்கையில் இருந்து  விலக தயாரா என ஒ.எஸ்-சிற்கு சவால் விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.

ஓ.பி.எஸ் குறித்த உண்மையை வெளியிடுவதாக கூறி எச்சரிக்கை விடுத்த ஆர்.பி:

இதனால் இந்த சொத்து குவிப்பு வழக்கு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலை என்னிடத்தில் ஆகாது, தான் கட்சி நலனுக்காகவும் எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன் சுய லாபத்திற்காக பேசவில்லை.
ஓபிஎஸ் அவர்களே இந்த நிமிடம் வரை உங்களை அண்ணனாக மதித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். ஆனால் என்னை மிரட்டி பார்க்கும் வேளையை வைத்துக்கொண்டால் உங்கள் குறித்த பல உண்மைகளை வெளியிட்ட வேண்டி இருக்கும், அதன்பின் ஒபிஎஸ் வெளியே  தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்...