ரிசர்வ் வங்கியை தொடர்ந்து....ஓம் பிர்லாவுக்கு ஓ,பன்னீர் செல்வம் கடிதம்..!

ரிசர்வ் வங்கியை தொடர்ந்து....ஓம் பிர்லாவுக்கு ஓ,பன்னீர் செல்வம் கடிதம்..!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஈ. பி.எஸ் கடிதத்தை நிராகரிக்குமாறு ஓ. பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்.

ஒற்றை தலைமை கோஷம்:

அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்த நிலையில், அதிமுகவில் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈ. பி.எஸ், ஓ. பி.,எஸ் இருவரும் எதிரெதிரே நின்று மோதிக்கொண்டனர்.

ஜூலை 11 இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார் ஈ. பி.எஸ்:

அதிமுகவில் எழுந்த ஒற்றை தலைமை கோஷத்தை அடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடைக்கோரி ஓ. பி.எஸ் இரண்டு முறை வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கானது ஈ. பி.எஸ் க்கு சாதமகாம முடிந்தது.  அதன் பின் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஈ. பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை 11 கலவரம்:

ஜுலை 11 ஆம் தேதி ஈ. பி.எஸ் இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன்பு, அன்றைய தினமே மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் சட்டஒழுங்கு பேணி காக்கப்படவில்லை என்றுக் கூறி வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். அதற்கு பிறகு சீலை அகற்றக்கோரி ஓ. பி.எஸ், ஈ. பி.எஸ் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாவியை ஈ. பி.எஸ்ஸிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

ஓ. பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் நீக்கம்:

இதனிடையே அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக ஈ. பி.எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்தும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதிவியில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும்  ஓ. பி.எஸை நீக்கினார். அத்துடன் அவரின் ஆதாரவாளர்களையும் கட்டியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கினார் ஈ. பி.எஸ். இதேபோன்று எம். பி. ரவீந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓம் பிர்லாவுக்கு ஈ. பி.எஸ் கடிதம்:

அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளர் ஈ. பி.எஸ் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், தேனி மாவட்ட எம். பியும், ஓ. பி.எஸ்ஸின் மகனுமான ஓ. பி. ரவிந்திரநாத் கட்சியின் அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்தும், அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டார். அதனால் அவரை அதிமுகவின் எம். பியாக கருத வேண்டாம் என்றும் கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார். 

ஓ. பி. ரவிந்திரநாத் பதில் கடிதம்:

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈ. பி.எஸ் எழுதிய கடிதத்துக்கு ஓ. பி. ரவிந்திரநாத் பதில் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது செல்லாது என்று குறிப் பிட்டிருந்தார். அத்துடன், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எனவே, இந்த கடிதத்தை நிகாரிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப் பிட்டிருந்தார். 

இன்று ஓம் பிர்லாவுக்கு ஓ. பி.எஸ் கடிதம்:

மக்களவை சபாநாயகருக்கு ஓ. பி.ரவிந்திரநாத் கடிதம் எழுதியதையடுத்து, இன்று ஓ. பி.எஸ் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப் பினராக இருக்கக்கூடிய ரவிந்திரநாத்தை அதிமுக உறுப் பினராக கருத வேண்டாம் என்ற ஈ. பி.எஸ் கோரிக்கையை நிராகரியுங்கள் என்று குறிப் பிட்டிருக்கிறார். 

மேலும், ஓ. பி. ரவீந்திரநாத் அதிமுக அடிப்படை உறுப் பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை ஏற்கக்கூடாது என்றும், தேர்தல் ஆணையம் எந்தஒரு முடிவையும் அறிவிக்காத நிலையில், அதிமுகவின் எம். பி.பதவியில் இருந்து ரவீந்திரநாத்தை நீக்கக்கூடாது என்று வலியுறுத்தியும்  மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம்  தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக்கு ஓ. பி.எஸ் கடிதம்:

முன்னதாக, அதிமுகவின் 7 வங்கி கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓ. பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் 7 வங்கி கணக்குகளையும் முடக்க வேண்டும் என ஓ. பி.எஸ் குறிப் பிட்டுள்ளார். மேலும், சட்டவிதிகளை மீறி திண்டுக்கல் சீனிவாசனை ஈ. பி.எஸ் நியமித்துள்ளார் என்றும், பொதுக்குழு தொடர்பான விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவினை அறிவிக்கும்வரை ஆர் பிஐ வங்கிகளுக்கு உரிய வழிக்காட்டுதல்கள் தரப்பட வேண்டும் எனவும் ஓ. பி.எஸ் கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின்படி தற்போது வரை நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் எனவும் ஓ. பி.எஸ். தெரிவித்திருந்தார்.