வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி 54 வகை ராக்கெட்...!

XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது...
14 மாடி அளவு உயரம்
ராக்கெட்டுகளில் XL அளவு வகை ராக்கெட் ஆக உள்ள PSLV - C 54 கிட்டத்தட்ட 14 மாடி அளவு உயரம் கொண்டது. 321 டன் உந்துவிசையுடன் பூமியிலிருந்து கிளம்பும் இந்த பிரம்மாண்டம், தன்னுள்ளாக 9 செயற்கைக்கோள்களை எடுத்துக் கொண்டு 740 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புவி சுற்றுவட்ட பாதையில் அவற்றை நிலை நிறுத்தப் போகிறது.
பி.எஸ்.எல்.வி-யின் 56வது பயணம்
அதன்படி,போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிக்கள் என அழைக்கப்படும் PSLV வகை ராக்கெட்டுகள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ராக்கெட்டாகும். மிகவும் நம்பகத் தன்மையான ராக்கெட் ஆக அறியப்படும் பி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்டின் 56 ஆவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேனோ வகை செயற்கை கோள்கள்
மேலும், புவியில் இருந்து ஏவப்பட்ட உடனேயே அண்டார்டிகா கண்டத்தை நோக்கியே விண்வெளிக்கு பயணம் செய்யும் இந்த வகை ராக்கெட்டுகள் மிகவும் துல்லியமாக செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த வல்லவை. அதன்படி, இதன் உள்ளாக மொத்தமாக ஒன்பது செயற்கைக்கோள்கள் வைத்து ஏவப்பட உள்ளது. அதில் 8 செயற்கை கோள்கள் நேனோ வகையை சேர்ந்த கோள்களாக உள்ளன.
பூட்டான் - இந்தியா கூட்டு தயாரிப்பு
முதலாவதாக எர்த் அப்சர்வேஷன் வகை செயற்கைக்கோளான ஓஷன் ஷர்ட் 3 மிகவும் முக்கியமான செயற்கைக்கோளாக உள்ளது. சுமார் ஒரு காரின் அளவான 1117 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட் இந்திய கடற்பரப்பை கண்காணிப்பதற்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது.
மேலும் படிக்க: நம்பகத்தன்மையற்ற நாடு அமெரிக்கா...எச்சரிக்கை விடுத்த முன்னாள் தளபதி..காரணம் என்ன?
மேலும், பூட்டான் - இந்தியா நாட்டின் கூட்டு தயாரிப்பில் உருவாக்கியுள்ள ins - 2B மற்றும் ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த எட்டு நேனோ செயற்கை கோள்களும் நாளை விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் இருந்த XL அளவு வகை ராக்கெட்டாக உள்ள பிஎஸ்எல்வி - சி 54 ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவு தளத்திலிருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இஸ்ரோவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். முன்னதாக, கடந்த நவம்பர் 18 ஆம் தேதி ”விக்ரம் எஸ்” விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக்கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து வந்தனர். அந்த வகையில் ஆளும் கட்சியான ஈரோடு கிழக்கு தொகுதியை தனது கூட்டணி கட்சியான காங்கிரஸ்க்கு ஒதுக்கியது. இதையடுத்து காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார்.
காங்கிரஸ்க்கு ஆதரவு :
இதனைத்தொடர்ந்து, திமுகவின் கூட்டணி கட்சியான விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் காங்கிரஸ்க்கு ஆதரவு அளிப்பதாக தங்கள் நிலைப்பாட்டை அறிவித்தனர். அதேபோன்று, மநீம கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது.
அதிமுகவின் நிலைப்பாடு என்ன?:
இதனிடையே, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிடுவதாக தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தது. இதேபோன்று எல்லா கட்சிகளும் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக விளக்கும் அதிமுக தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருந்து வந்தது.
அதற்கு காரணம் அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பூசல் தான். கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டதால் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தனிதனியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனிதனியாக போட்டியிடுவதாக அறிவித்தனர். ஆனால், ஈபிஎஸ் தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம்தாழ்த்தி வந்தனர்.
வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம் :
இதற்கிடையில் நேற்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியதால், அதிமுக தரப்பில் இரு அணிகளும் எப்போது வேட்பாளர்களை அறிவிக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்தனர்.
வேட்பாளர் அறிவிப்பு :
இந்நிலையில் ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு என்பவரை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே.எஸ்.தென்னரசு, ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய்தோட்டம் பகுதியை சேர்ந்தவர். அதிமுகவில் 1988ல் ஈரோடு நகர செயலாளர், 1992-ம் ஆண்டு ஈரோடு நகர இணை செயலாளர், 1995-ம் ஆண்டு நகர செயலாளர் என்று தொடர்ந்து அடுத்தடுத்த பதவிகளில் இருந்துவந்த இவர், கடந்த 2001 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர் ஒருவரை திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர், காதில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு தரம்கெட்ட வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்த நிகழ்வு பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
தடையை மீறி கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் :
சேலம் மாவட்டம் திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலுக்குள் பட்டியலின மக்கள் சென்று அம்மனை தரிசனம் செய்ய ஒரு தரப்பினர் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோயிலுக்குள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அந்த இளைஞரை சூழ்ந்து கொண்ட ஊர்மக்கள் கடுமையான வார்த்கைளால் வருத்தெடுத்துள்ளனர்.
அப்போது, அங்கு நின்றிருந்த சேலம் தெற்கு தி.மு.க ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான மாணிக்கம் என்பவர், பட்டியலின இளைஞரை பிடித்து வெளியே தள்ளி உள்ளார். அத்துடன் அந்த இளைஞர் மற்றும் அவரது தந்தையையும் காதில் இருந்து ரத்தம் வரும் அளவுக்கு தரமற்ற வார்த்தைகளால் திட்டித்தீர்த்துள்ளார்.
இதையும் படிக்க : எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!
கொலை மிரட்டல் :
அதன் பிறகும் ஆவேசம் தணியாத அந்த திமுக நிர்வாகி, அங்கு நின்றிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை பார்த்து, "இவர்கள் எல்லாம் ஆட்கள் இல்லையா? இவர்களுக்கு தெரியாததை நீ செய்கிறாயா? சோறு தண்ணி இல்லாமல் செத்து போயிடுவ பாத்துக்கோ என கூச்சலிட்டுள்ளார். மேலும், எல்லாரையும் காலி பண்ணிடுவேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தக் கோயில் 18 பட்டிக்கும் பொதுவான கோயில் என யாரோ சொல்லிக் கொடுத்ததை அந்த இளைஞர் சொல்வதாக கூட்டத்தில் இருந்தவர் சொல்ல ஆவேசமான திமுக நிர்வாகி, உங்க அம்மாவும், அப்பாவும் கோயில் கட்ட பணம் கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஊருல எங்கேயும் நடமாட முடியாது என்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி உள்ளது.
சமூக நீதி சர்ச்சைகளில் சிக்கி வரும் திமுகவினர் :
முன்னதாக, விழுப்புரத்தில் நடைபெற்ற நியாய விலைக் கடை கட்டட திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, மேடையில் அமர்ந்திருந்த பட்டியல் இனத்தை சேர்ந்த ஒன்றியக்குழு தலைவரை பார்த்து “ஏம்மா, நீ எஸ்.சி. தானே” என கேட்ட நிகழ்வு பெரும் பேசு பொருளானது. இதேபோல், ஏற்கனவே சாதிப் பெயரை சொல்லி விமர்சித்ததால் தனது துறையை இழந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை சமூக நீதி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர்.
இதுபுறம் ஒருக்க, மற்றொரு புறம் நாற்காலி கொண்டு வருவதற்கு தாமதமானதால் அமைச்சர் ஒருவர் கல்லை கொண்டு வீசுவது, மேடையில் தொண்டனை அடிப்பது என மறுபுறம் அராஜக அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் நாள்தோறும் சமூக நீதியை மேற்கொள்காட்டி பேசிவரும் திமுகவினர், மறுபுறம் தாழ்த்தப்பட்ட சமூக மக்களை சாதி பெயரை சொல்லி சாதிய வன்மத்தோடு பேசும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
தி.மு.க கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பின்வருமாறு....
கேள்வி: சமீபத்தில் உங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்?
பதில்: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாகி இருப்பதுதான் அண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சந்திரசூட் அவர்கள் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளும் ஆக வேண்டும் என்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தொடக்க காலத்தில் இருந்தே குரல் கொடுத்துக்கொண்டு வருகிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ் இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்! உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழ்நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்கிறவர்கள் நாங்கள்.
இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்! உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியாகி வருவதை முதல் படியாகவே கருதுகிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்கும் என்று நம்புகிறேன்.
கேள்வி: இவ்வளவு நன்றாக சென்று கொண்டிருக்கும்போது, நீதிபதிகளைத் தேர்வு செய்கிற “கொலிஜியம்” அமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய சட்ட அமைச்சருக்கும் நடக்கின்ற மோதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அது ஆரோக்கியமானதாக இல்லை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் முக்கியமான ஒன்றாக மதிக்கப்படுகிற நீதித்துறையில் அனைத்துச் சமூகங்களின் பிரதிநிதித்துவமும் இடம்பெற வேண்டும் என்பதுதான் நீண்ட கால கோரிக்கையாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் அதைத்தான் விரும்புகிறது.
அதற்காக நீதித்துறையின் சுதந்திரத்தில் குறுக்கிடுகிற வகையில், ஒன்றிய அரசின் பிரதிநிதி ஒருவர் நீதிபதிகள் தேர்வுக்குழுவான கொலிஜியத்தில் உறுப்பினராக நியமிப்பது முறை இல்லை. நீதிபதிகள் நியமனத்தில் மாநில அரசின் கருத்தைக் கூட மதிக்காத இன்றைய சூழலில், ஒன்றிய அரசின் பிரதிநிதி இடம்பெறுவது, உயர்நீதிமன்றத்தில் மட்டுமல்ல, உச்சநீதிமன்றத்திலும் சமூகநீதியின் அடிப்படையிலான நீதிபதி தேர்வு முறைக்கு துளியும் உதவாது என்பதுதான் என்னுடைய கருத்து.
கேள்வி: ஞாயிற்றுக்கிழமைகூட ஆய்வுப் பணியை மேற்கொள்கிறீர்களே…?
பதில்: முதலமைச்சருக்கு சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமை, அலுவலக நேரம் எல்லாம் கிடையாது. இந்த ஆண்டு கனமழை பெய்தபோது, சென்னையில் மக்கள் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள் என்றால், அதற்கு நம்முடைய அரசு முன்கூட்டியே எடுத்த தீவிர நடவடிக்கைகள்தான் காரணம். அதில் இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கிறது என்று அப்போதே சொன்னேன்.
அந்த மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தேன். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளைச் சீரமைக்கிற பணி இப்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதையும் பார்த்தேன். கிண்டியில் கட்டப்பட்டு வரும் உயர்தரப் பல்நோக்கு மருத்துவமனைக் கட்டுமானப் பணிகள், அதையும் பார்த்தேன். முதலமைச்சர் என்கிற முறையில், நானே நேரில் ஆய்வுகளை மேற்கொள்கிறபோது, அதிகாரிகள் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் பெறுவார்கள். அதனால், திட்டங்களை நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக நிறைவேற்றி முடிக்கலாம். அதனால்தான் கள ஆய்வுக்கு நான் முக்கியத்துவம் தருகிறேன்.
கேள்வி: இப்போது “கள ஆய்வில் முதலமைச்சர்” என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறீர்களே. இதனுடைய செயல்முறை எப்படி இருக்கும்?
பதில்: களப்பணி என்பது எனக்கு புதியது இல்லை. களத்தில் இருந்து வந்தவன் நான்! களப்பணி ஆற்றியே முன்னுக்கு வந்தவன் நான்! நான் சென்னையின் மேயராக இருந்தபோது, மாநகரத்தின் மேம்பாட்டுக்காகப் பல திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தினோம்.
குறிப்பாக, சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கின்ற வகையில், 9 மேம்பாலங்களைக் கட்டினோம். ஒதுக்கப்பட்ட நிதியில் 30 விழுக்காட்டை மிச்சப்படுத்தினோம். குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே அதைக் கட்டியும் முடித்தோம்.
அதுமாதிரி, நான் துணை முதலமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை சார்பாக, ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே முடித்து, தலைவர் கலைஞருடைய பாராட்டைப் பெற்றோம். அந்தத் திட்டத்தால், காலம்காலமாகக் குடிநீர் கிடைக்காமல் வறண்டு கிடந்த ராமநாதபுரம் பூமி, இன்றைக்கு தண்ணீர்ப் பஞ்சம் இல்லாத பகுதியாக மாறி இருக்கிறது. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
தலைமைச் செயலகத்தில் உட்கார்ந்து திட்டங்களை உருவாக்குகிறோம். சட்டமன்றத்தில் அறிவிக்கிறோம். நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தத் திட்டங்கள் எல்லாம் எவ்வளவு வேகமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று, கோட்டையில் எனது அறையில் உள்ள Dashboard-இல் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அதோடு, இந்தத் திட்டங்களின் செயல்பாட்டை, நேரில் பார்த்து முடுக்கி விடுவதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல இருக்கிறேன்.
முதலாவதாக பிப்ரவரி 1-ஆம் தேதி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்களை விரிவாக ஆய்வு செய்யப் போகிறேன். குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மக்கள் நலத்திட்டங்கள் இந்த ஆய்வின் முக்கிய அம்சங்களாக இருக்கும்.
சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உயரதிகாரிகளும் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். துறைச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுடனும், கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் திட்டச் செயல்பாடுகளை பற்றி விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கான முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் முதலமைச்சர் தொடங்கி, கடைநிலை அரசு ஊழியர் வரைக்கும் ஒரே நோக்கத்துடன் செயல்பட்டால், தமிழ்நாடு தலைசிறந்த மாநிலமாக மாறும். அதற்கான செயல்திட்டம்தான் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்கிற இந்தத் திட்டம்.
கேள்வி: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் களத்தினுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது?
பதில்: இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ - தம்பி திருமகன் ஈ.வெ.ரா மறைவு எதிர்பாராதது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு. நான் ஈரோட்டுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தியபோது, இளங்கோவன் அவர்களின் மனநிலையைப் பார்த்து கலங்கினேன். அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈ.வெ.ரா மறைந்து, அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது.
இத்தகைய சூழலில், கனத்த இதயத்தோடுதான், ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார். எப்படி இருந்தாலும் இது தேர்தல் களம். இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.கழக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலுமே தி.மு.கழக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி!
கேள்வி: ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள் அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா?
பதில்: ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம்! அத்தீர்மானம் ஏற்கப்பட்டு - அவையின் மாண்பும் மக்களாட்சித் தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்குப் பதிலளித்து நான் பேசியபோது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மாண்பைக் காக்கவும், மக்கள் எங்களுக்கு வழங்கிய ஆட்சியின் வலிமையை உணர்த்தவும், நூற்றாண்டைக் கடந்த இந்த சட்டமன்றத்தின் விழுமியங்களைப் போற்றவும் நான் என்னுடைய சக்தியை மீறியும் செயல்படுவேன்” என்று குறிப்பிட்டேன். அதைத்தான் இப்போதும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புறேன்.
எனவே, குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு! குடியரசு நாளன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பைக் காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை, எந்த சமரசமும் இல்லை!
கேள்வி: பான் மசாலா, குட்கா ஆகிய போதைப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த தடைய உயர்நீதிமன்றம் நீக்கி இருக்கிறதே?
பதில்: உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும். ஏற்கனவே இருக்கிற சட்டங்களின் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகளை அரசு இப்போதும் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. 3 மாதங்களில் 10, 673 வழக்குகள் பதியப்பட்டு, 150 டன் கஞ்சா பறிமுதல், செய்யப்பட்டிருக்கிறது.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைச் செய்கிறவர்கள் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க, சட்டத்தில் தேவையான திருத்தங்ளைக் கொண்டு வருவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. போதைப் பொருட்கள் ஒழிப்பில் தமிழ்நாடு அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக, உயர்நீதிமன்றமே பாராட்டி இருக்கிறது. எனவே, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை நிச்சயமாக அறவே ஒழிப்போம். அது உறுதி! அதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளதே?
பதில்: சகோதரர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரி முனையில் இருந்து நான்தான் தொடங்கி வைத்தேன். அது மிகப் பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னேன். இந்தப் பயணத்தில் தேர்தல் அரசியலையோ, கட்சி அரசியலையோ அவர் பேசவில்லை.
இந்திய ஒன்றியத்தின் அமைதிக்கு என்றைக்கும் தேவைப்படுகிற மதச்சார்பற்ற கொள்கையைத்தான் பேசி இருக்கிறார். அதனால் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, ஒற்றுமைப் பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது. அந்த வெற்றியை தடுக்கப் பார்த்தார்கள். உரிய பாதுகாப்பு வழங்காமல் அந்தப் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்தப் பார்த்தார்கள். அதையெல்லாம் தாண்டி, இந்திய ஒற்றுமைப் பயணத்தின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் சகோதரர் ராகுல்காந்தி அவர்களுக்கு, என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.
கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வருகிறதே?
பதில்: இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது 318 கோடி ரூபாய்க்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகளைச் செய்தது தமிழ்நாடு அரசு. குறிப்பாக, உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் அனுப்பினோம்.
இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வினைப் பொறுத்தவரை தொடர்ந்து இவ்வாறு பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இலங்கையில் வாழும் தமிழர்கள் விரும்புகிற வகையில் கிடைக்க வேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடு. வரக்கூடிய நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும், திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் இதை வலியுறுத்துவார்கள்.
கேள்வி: ஊடகங்கள், சமூக ஊடகங்களை உன்னிப்பாகக் கவனித்து வரும் தலைவர்களில் நீங்களும் ஒருவர். ஊடகங்களின் இன்றைய போக்கைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: பொதுவாக அன்றாடச் செய்திகளுக்காகச் செய்தித்தாள்களை வாசிப்பதோடு, தொலைக்காட்சிகளையும் தொடர்ந்து பார்ப்பேன். டி.வி. மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களையும் தொடர்ந்து கவனிப்பேன். அவற்றில் வரும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு, தீர்வு காணச் சொல்வது என்னுடைய வழக்கம். ஆனால், சில ஊடகங்கள் பிரச்சினையை ஒளிபரப்புகிறார்கள்.
அதைப் பார்த்துவிட்டு உடனே நடவடிக்கை எடுக்கிறோம். பிரச்சினையை ஒளிபரப்புகிற ஊடகங்கள், அது தொடர்பாக எடுத்த நடவடிக்கையை வெளிப்படுத்துவதே இல்லை. சில நேரங்களில் காலையில் ஒரு பிரச்சினை பற்றி செய்தி போட்டார்கள் என்றால், அதற்குப் பிற்பகலுக்குள் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனாலும், இரவு வரைக்கும் அந்த செய்தியை ’அப்டேட்’ செய்வதில்லை. பிரச்சினைகளைப் பிரசுரிக்கிற சில செய்தித்தாள்களும்கூட, மறுநாள் அதுகுறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியோ, அரசு அளித்த விளக்கத்தையோ முறையாகப் போடுவதே இல்லை. இனியாவது அத்தகைய போக்கை அவர்கள் மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூரில் ஏலம் விடுகிறார்களே?
பதில்: இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!
-நப்பசலையார்
இதையும் படிக்க: எதுக்கு வந்திருகீங்க? யாருக்கு தெரியும்...கட்டாயப்படுத்தி கருத்து கணிப்பு கூட்டத்திற்கு அழைத்து வந்த கட்சியினர்...!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்காக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பொதுவாகவே, அரசியல் கட்சிகளை பொறுத்தவரையிலும் அரசியல் சார்ந்த கூட்டங்களிலும் சரி தேர்தல் நேரங்களில் சரி பொதுமக்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வருவது என்பது சமீபகாலமாக நடந்து வரும் ஒரு நிகழ்வே, அந்த வகையில், தற்போது ஒரு திட்டத்திற்கான கருத்து கேட்கும் கூட்டத்திற்கு கட்சியினர் பொதுமக்களை அழைத்து வ்ரும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக நடைபெற்று வரும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் திமுகவினர் அழைத்து வந்த பொதுமக்களின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இது தொடர்பான வீடியோவில், கூட்டத்திற்கு வந்துள்ள பொதுமக்களிடம், கூட்டத்திற்கு எதற்காக வந்துள்ளீர்கள், என்ன கருத்தினை தெரிவிக்க உள்ளீர்கள் என ஊடகவியாலர்கள் கேள்வி எழுப் பியபோது, நாங்கள் எதற்காக வந்துள்ளோம் என்றே தெரியவில்லை என்றும், ஒரு சிலர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ளதாகவும், கலைஞரின் சிலை திறப்பு விழாவிற்கு வந்துள்ளதாகவும் பல்வேறு விதமான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க : ஈ பிஎஸ் எடுத்துள்ள புதுவியூகம்...வீடு வீடாக...ஆர். பி.உதயகுமார் சொன்ன தகவல்...!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தின் கருத்து கேட்பு கூட்டத்திற்கு வந்துவிட்டு, எதற்காக வந்துள்ளோம் என்றே தெரியாமல் கருத்து கேட்பு கூட்டமா???கட்சி பொதுக்கூட்டமா??? என பல்வேறு முரண்பாடான பதில்களை பொதுமக்கள் தெரிவித்திலிருந்தே, அவர்கள் தங்களுடைய உணர்வுபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதற்காக வரவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
வழக்கம்போல் அரசியல் சார்ந்த கூட்டத்திற்கு பணத்தை கொடுத்து ஆள் சேர்ப்பது போலவே, இந்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கும் பணத்தை கொடுத்து ஆட்களை அழைத்து வந்தது போலத்தான் தெரிவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.
ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசியலில் முக்கிய மாற்றங்கள் நிறைய ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம். ஆட்சி மாற்றம், குடியரசு தலைவர் ஆட்சி அமல் என பல நிகழ்வுகளை கூறலாம். அந்த வகையில் ஜனவரி 27ல் தி முக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி 3வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
அதி முக பனிப்போர்:
எம்.ஜி.ஆர் மறைவுவிற்கு பிறகு அதி முகவில் பனிப்போர் நிலவிய நிலையில் யார் அடுத்த முதலமைச்சர் என்ற நிலையில் ஏற்பட்ட போது, அண்ணா மறைந்த போது தற்காலிக முதலமைச்சராக இருந்த அதே நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஆர். எம். வீரப்பன் உள்ளிட்டோரின் முயற்சியால் எம்ஜியாரின் மனைவி ஜானகியை முதலமைச்சராக்கினர். இதனையடுத்து அதி முக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்தது. அதனை தொடர்ந்து ஜானகி தலைமையிலான ஆட்சி ஆட்சி கலைக்கப்பட்டு ஜனவரி 30 1988 ல் குடியரசு தலைவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது. பின் ஒரு ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
நான்கு முனைப் போட்டி:
மருங்காபுரி மற்றும் மதுரை மேற்கு ஆகிய தொகுதிகளை தவிர்த்து 232 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 1967ல் இழந்த ஆட்சியை மீண்டும் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தனித்து களம் கண்டது. 14 முறை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் மேற்கொண்டர் என்பது குறிப்பிடதக்கது. தி. மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், முஸ்லீம் லீக் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி இடம்பெற்றிருந்தது. அதி முக ஜானகி அணிக்கு திராவிடர் கழகம் ஆதரவளித்தது மேலும் நடிகர் சிவாஜி கணேசனின் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் ஆதரவளித்தது. அதி முக ஜெயலலிதா அணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவளித்தது.
வாய்ப்பை பயன்படுத்திய தி. மு.க.:
13ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்ற இயலாத கருணாநிதி தலைமையிலான தி. மு.க. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தயாரானது. அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருந்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்தது
தி. மு.கவின் வாக்குறுதிகள்:
தமிழ்நாடு மக்களின் கோரிக்கையாக இருக்கும் மாநில சுயாட்சியோடு கூடிய முழுமையான கூட்டாட்சி முறை என்பதை முதல் தேர்தல் வாக்குறுதியாக அளித்தது தி. மு.க. இந்தி திணிப்புக்கு எதிராக எத்தகைய தியாகங்களையும் செய்ய தயாராக இருப்பதாக அறிவித்தது. மத்திய அரசிலும் அதன் நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு தர வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவோம் என வாக்குறுதியும் அளித்தது.
வெற்றியை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டு சரியான தேர்தல் வாக்குறுதிகளை அளித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியது. 232 தொகுதிகளில் 198 இடங்களில் தி முக களமிறங்கியது. கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 21 இடங்களையும் ஜனதா தளத்துக்கு 10 இடங்களையும் இந்திய யூனியன் லீக்குக்கு 3 இடங்களையும் ஒதுக்கியது.
ஜெயலலிதா அணி:-
இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் தேர்தலை சந்திக்க தயாரானது. அஇஅதி முகவின் ஜெயலலிதா அணி 196 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் 12 இடங்களிலும் போட்டியிட்டன.
ஜானகி அணி:
ஜானகியின் அஇஅதி முக அணிக்கு இரட்டை புறா சின்னம் ஒதுக்கப்பட்டது. ஜானகியின் அணி 175 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான தமிழக முன்னேற்ற அணி 45 இடங்களிலும் போட்டியிட்டன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஜானகிக்கு ஆதரவாக களம் இறங்கினார்.
மாத்தி யோசித்த காங்கிரஸ்:
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மேலும் ஓராண்டுக்கு குடியரசு ஆட்சியை நீட்டித்ததோடு கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னை மறைமலை நகரில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி கருப்பையா மூப்பனாரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. இறுதியில் தி. மு.க கூட்டணி 175 தொகுதிகளையும், காங்கிரஸ் 26 இடங்களிலும், ஜானகி அணி ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதி முகவின் ஜெயலலிதா அணி 27 இடங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.
பதவியேற்பு விழா:
1973 ஆம் ஆண்டு தி முக ஆட்சிக் காலத்தில் அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது இறுதியில் திறப்பு விழாவிற்கான தேதியும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் தி முக ஆட்சி கலைக்கப்பட்டு நெருக்கடி நிலை அமலுக்கு வந்தது. பின் அன்றைய குடியரசு தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. அவ்விழாவிற்கு தி முக தலைவரான கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கவில்லை. 1989 ல் முதலமைச்சராக பதவியேற்க மு.கருணாநிதி தேர்வு செய்த இடம் அன்று அவர் புறக்கணிக்கப்பட்ட அதே இடம்தான் வள்ளுவர் கோட்டம்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: மோதலுக்கு தயாராக இருப்பவரா முதலமைச்சர்.... முரசொலியின் விளக்கம் என்ன?!!