யார்யா இந்த பிடிஆர்..? கூகுளில் தேடிய வடமாநில மக்கள்... வந்து விழுந்தது அமைச்சரோட ஹிஸ்டரி!!

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஊடக விவாதம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகிக் கொண்டு கொண்டிருக்கும் சூழலில் வடஇந்தியர்கள் யார் இந்த பிடிஆர் என கூகுளில் தேடி உள்ளனர்.

யார்யா இந்த பிடிஆர்..? கூகுளில் தேடிய வடமாநில மக்கள்... வந்து விழுந்தது அமைச்சரோட ஹிஸ்டரி!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பிடிஆர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வைரலானது. முக்கியமாக ஒன்றிய அரசு மாநிலங்களின் நிதியை வாங்கிக்கொண்டு, ஜிஎஸ்டி நிலுவை தொகையை தர மறுப்பது குறித்து இவர் வைத்த வாதங்கள் தேசிய அளவில் வரவேற்பை பெற்றது. பல மாநில அரசுகள் ஜிஎஸ்டி நிலுவை தொகை குறித்தும், ஒன்றிய அரசின் போக்கு குறித்தும் பேச தொடங்கி உள்ளனர்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்டார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இவரின் பொருளாதார புலமை, தனது கேள்விகளால் மத்திய அரசை தெறிவிடுவதால்  வடஇந்திய ஊடகங்கள் பலவற்றில் பிடிஆரை விவாதத்திற்கு அழைக்கின்றனர். அதிலும், முதல்வர் ஸ்டாலினின் திட்டங்களை, அவர் பேச நினைப்பதையும் இந்தியாவுக்கே கேட்கும்படி வடஇந்திய ஊடகங்களுக்கு கொண்டு செல்வது, மத்திய அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் கில்லி பிடிஆர்.

இந்நிலையில், நேற்று இந்தியா டுடே சேனலில்  நடத்திய விவாதத்தில் பிடிஆர் கலந்து கொண்டு பேசினார். அதில், வேக்சினுக்கு யார் காசு கொடுக்க வேண்டும், மாநில அரசு கொடுக்க வேண்டுமா? அல்லது ஒன்றிய அரசு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி வைக்கப்பட்டது. இதில், பிடிஆர் சொன்ன பதில் தான் செம்ம வைரல்.

இந்த விவாதத்தில் பேசிய  பிடிஆர், ஒன்றிய அரசுக்கு பணம் எங்கிருந்து வருகிறது? வானத்தில் இருந்து வந்துவிடவில்லை. ஒன்றிய அரசுக்கு வரும் பணம் எல்லாம் மாநில அரசின் வரிதான். அதெல்லாம் மக்களின் பணம்.

குஜராத் முதல்வராக இருந்த போது மோடி சொன்னதைத்தான் நான் இப்போதும் சொல்கிறேன். இது ஒன்றிய அரசின் பணம் கிடையாது. இது மாநில அரசு வழங்கும் மக்களின் பணம். மக்களின் பணத்தை வசூலித்து மாநில அரசு ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது. இதை யார் எப்படி செலவழித்தாலும் இது மக்களின் பணம் என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும்.

இவர்கள் என்னவோ தங்கள் பரம்பரை சொத்துக்களை மக்களுக்கு செலவு செய்வதைப்போல இருக்கிறதே. மக்களிடம் வாங்கிய பணத்தை, மாநிலங்களிடம் வாங்கிய பணத்தை முறையாக செலவு செய்யுங்கள். தடுப்பூசி போடுவதற்கு ஒழுங்காக செலவு செய்யுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒன்றிய அரசுதான் உலகம் முழுக்க டெண்டர்களை விட்டு, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.

சர்வதேச ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிக சக்தி இருக்கிறது. மாநில அரசு வெளிநாட்டு கடன்களை பல நாடுகளில் இருந்து வழங்க முடியாது. சாதாரண பட்ஜெட் பணிகளுக்கு ஒன்றிய அரசின் அனுமதி இன்றி நாங்கள் கடன் வாங்க முடியாது. அப்படி இருக்கும் போது ஒன்றிய அரசு தான் இதில் தலையிட வேண்டும்.

இந்த விவாதம் ஹைலைட்டே...இது மக்களின் பணம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்களிடம் வசூலித்த பணத்தில் மக்களுக்கு இலவசமாக கொரோனா வேக்சின் கொடுக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம் என்று  குறிப்பிட்டு இருந்தார். அவர் பேசிய இந்த பாய்ண்ட்டுகள் யார்யா இந்த பிடிஆர்? அடேங்கப்பா... ஒரு அமைச்சர் இவ்வளவு பொருளாதார அறிவோடு பேசுவதை கேட்டு வியந்து போயுள்ளனர். அதுவும் விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே டிவீட்கள் பறந்தது. அதிலும் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், சட்டீஸ்கர், டெல்லி மக்கள் கூகுளில் தட்ட அமெரிக்காவில் பிஎச்டி, எம்பி படித்தவர் என வந்து விழுந்திருக்கிறது இவருடைய ஹிஸ்டரி.