நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

தமிழகத்தில் நாளை நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நவம்பர் 6ம் தேதி தமிழகத்தில் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த வருகிற அக்டோபர் 31ம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்று நீதிபதி இளந்திரையன் எச்சரிக்கை தெரிவித்தார்.

3 இடங்களில் பேரணி நடத்த அனுமதி:

நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, சட்டஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதியளிக்க மாவட்ட எஸ்.பி.களுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பினார். அதன்படி, “கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது”. மற்ற இடங்களில் அனுமதி வழங்கப்படவில்லை.

இதையும் படிக்க: ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிரடி உயர்வு...விளக்கமளிக்கும் அமைச்சர்!

அறிக்கை தாக்கல் செய்த காவல்துறை:

இதனை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, ”உளவுத்துறையினை காரணம் காட்டி காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து தப்ப நினைக்கிறது” என்று கூறி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதற்கு  “நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர், சூழல் வேறுவிதமாக மாறியுள்ளது. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டம் நடத்துவதாக இருந்தால் அனுமதி கொடுக்கலாம். 24 இடங்களில் அனுமதி கொடுக்க முடியாது. நவம்பர் 6ம் தேதி பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உளவுத்துறையின் அறிக்கையை சந்தேகம் எனவும் யூகம் என்றும் சொல்வது சரியில்லை” என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான உளவுத்துறை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ். எஸ் பேரணிக்கு அனுமதி வழங்காத 47 இடங்களில் உளவுத்துறையின் அறிக்கையை ஆராய்ந்த பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என உத்தரவிட்டார்.

44 இடங்களில் பேரணி நடத்த அனுமதி:

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துள்ளது. அதாவது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடம், அருமனை ஆகிய 6 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. இந்த 6 இடங்களைத் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள் உள்பட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை அதிரடி உயர்வு...விளக்கமளிக்கும் அமைச்சர்!

அசம்பாவிதம் நடந்தால் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பு:

ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட 6 இடங்களில் இயல்பு நிலை திரும்பும் வரை ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு காத்திருக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் அணிவகுப்பு ஊர்வலத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறக் கூடாது எனவும், மீறி நடந்தால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறித்தி இருந்தார்.

பேரணியை ஒத்திவைத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு:

இந்நிலையில் நாளை நடைபெறுவதாக இருந்த பேரணி ஒத்தி வைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும், உயர்நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தான் பேரணியை ஒத்தி வைப்பதாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையப்பக்கங்களில் இதுகுறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.