சசிகலா புளுகு மூட்டைக்கு முற்றுப்புள்ளி வைத்த டாக்டர் ஹண்டே..! எம்ஜிஆரிடம் ஒருபோதும் நெருக்கமாக இருந்தது கிடையாது..!
சசிகலா ஒருபோதும் எம்.ஜி.ஆர்-உடன் நெருக்கமாக இருந்ததில்லை..!

தருமபுரி மாவட்டம் வாச்சாத்தியில் மலைகிராம மக்கள் மீதான வன்முறை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தில் மலைக் கிராம மக்கள் சந்தன மரங்களை கடத்தி வைப்பதாகக்கூறி கடந்த 1992 ஆம் ஆண்டு வருவாய்த்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அக்கிராமத்தில் உள்ள 13 வயது உள்பட 18 இளம் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பழங்குடியின மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்கொடுமை, தமிழ்நாட்டை மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது.
தொடர்ந்து இந்த புகார் தொடர்பான விசாரணையை அப்போதைய தமிழக அரசான அதிமுகவும், காவல் துறையும் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ- க்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஐஎஃப் எஸ் அதிகாரிகள் உள்பட 269 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், வழக்கு நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் 269 பேரில் 54 பேர் இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: இன்று தீர்ப்பு..!
இதனால் வழக்கை விசாரித்த தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம், சம்பவம் நடந்து 19 ஆண்டுகள் கழித்து, 2011 ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது. அந்த தீர்ப்பில் உயிரிழந்த 54 பேரை தவிர மீதமுள்ள 215 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்து, அதில் 12 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்த அரசு அதிகாரிகள்(குற்றம்சாட்டப்பட்டவர்கள்), சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்து, வாச்சாத்தி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், தருமபுரி முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்ட 18 பேருக்கு உடனடியாக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்போதைய எஸ்.பி.மாவட்ட ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரூ. 5 லட்சம் குற்றம் புரிந்தவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அல்லது அவர்களது குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், 1-3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை உள்ளிட்ட அனைத்தும் செல்லும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
வேளாண்மையின் தந்தையும், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையுமான பிரபல விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். அவர் ஆகஸ்ட் 7ம் தேதி 1925-ல் தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் பிறந்தார்.
மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) ஆகியவற்றில் முறையே விவசாயத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார்.
பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1960கள் மற்றும் 1970களில் இந்தியாவில் இந்த நவீன விவசாய நுட்பங்களை அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதில் சுவாமிநாதன் முக்கிய பங்கு வகித்தார்.
இதையும் படிக்க : அக்டோபர் 27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு... !
விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் சுவாமிநாதனின் பங்களிப்புகள் அவருக்கு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உட்பட பல விருதுகளையும் கௌரவங்களையும் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பணிக்காக உலக உணவு விருதையும் பெற்றுள்ளார்.
உத்தியோகபூர்வ ஓய்வுக்குப் பிறகும், எம்.எஸ்.சுவாமிநாதன் விவசாயத் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், மேலும் உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு தொடர்பான விவாதங்களில் முக்கிய நபராகத் தொடர்ந்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலமானார்.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த சில மாதங்களாக நீடித்துவந்த அதிமுக - பாஜ.க தலைவர்கள் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவியது. பேரறிஞர் அண்ணாவை பற்றி விமர்சித்து பேசிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் அண்ணாமலைக்கும் வார்த்தை மோதல் வெடித்தது.
அண்ணாவை பற்றிய தமது கருத்துக்கு வருத்தமோ மன்னிப்போ கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வந்தார். இதையடுத்து அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என்று பாஜக மேலிட தலைவர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குழு வலியுறுத்தியது.
ஆனால், அதிமுகவின் கோரிக்கையை பாஜக தலைமை நிராகரித்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப் பினர்கள் உள்ளிட்டோர் பாஜக கூட்டணியில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
சுமார் 1 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் துணை பொது செயலலாளர் கே. பி.முனுசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டு அதிமுக தலைவர்களை அவதூறாக பேசியதால் இந்த முடிவை எடுத்ததாக கே. பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.
மேலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் அப்போது அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, ’நன்றி! மீண்டும் வராதீர்கள்’ என அதிமுகவின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் ட்ரெண்டாகி வருகின்றனர்.
முன்னதாக கூட்டத்திற்கு வருகை தந்த பொதுச்செயலளார் எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையும் படிக்க: உலகின் மிக பெரிய இந்து கோயில் அக்டோபரில் திறப்பு..!
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் செயலாளராக சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டதை அடுத்து, கர்நாடகாவை போல ராஜஸ்தானிலும் வெற்றிக்கொடி நாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கர்நாடக தேர்தலும் சசிகாந்த் செந்திலும்
கடந்த மே மாதத்தில் கர்நாடக சட்டபேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பல்வேறு கருத்துகணிப்புகளை பொய்யாக்கி காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையையான இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் போராட்டத்தில் தோல்வியை தழுவியது.
2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக கருதப்பட்ட கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது பாஜகவினரிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சோர்ந்துபோய் கிடந்த காங்கிரஸ் கூட்டணிக்கு இது புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதற்கான காரணம் என்ன? இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது? என்ற தேடுதலை தொடங்கியபோதுதான் சசிகாந்த் செந்திலின் பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தது. பாஜகவை வீழ்த்திய ஐஏஎஸ், வார் ரூமை அலங்கரித்த தமிழர் என சசிகாந்தின் புகழ் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டுமின்றி பாஜகவிற்கு எதிரான அனைத்து வட்டாரங்களிலும் பிரபலமடைந்தது.
யார் இந்த சசிகாந்த் செந்தில்?
2019 ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்ததையடுத்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது ஐஏஸ் அதிகாரியாக கர்நாடகாகாவில் பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் இச்சட்டத்தை கண்டித்து அப்போது தனது பதவியை ராஜினாமா செய்தார். இது அப்போதைய அரசியலில் பரபரப்பை உண்டாக்கியது.
இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் கட்சியில் இணைந்தார். சில காலத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததும் அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதும் அவரது கட்சிக்காரர்களுக்கே தெரிந்திருக்குமா? என்ற கேள்வி ஒருபுறம் இருந்து கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் கர்நாடக தேர்தல் முடிவுகள் அவரை பற்றிய தேடல்களை அதிகப்படுத்தி அவருக்கு புகழை தேடித்தந்தன.
தமிழ்நாடு தலைவர் போட்டியில்
கர்நாடக தேர்தலில் வெற்றிக்கு காரணமாக இருந்ததால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவராக இவர் நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து எந்த காரணமும் இல்லாமல் ஓய்வு பெற்று பின்னர் பாஜகவின் தலைவராக மாறியுள்ள அண்ணாமலை போன்றவர்களை எதிர்க்க .சசிகாந்தை போன்ற திறமையும், இலட்சிய உறுதியும் கொண்டவர்கள் தலைவராக வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்குள்ளேயும் குரல்கள் எழத்தொடங்கின.
இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் இவரது பெயரும் இருப்பதாக கூறப்படுவது மட்டுமில்லாமல், இவரை தலைவராக நியமிப்பதற்காவே தமிழ்நாடு கமிட்டிக்கு தலைவரை நியமிப்பதை தாமதபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வெல்லுமா ராஜஸ்தான் வார் ரூம்?
இப்படிப்பட்ட சூழலில்தான் சசிகாந்த் செந்தில் ராஜஸ்தான் தேர்தலில் வார் ரூம் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுத் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் சசிகாந்த் செந்திலை ராஜஸ்தான் சட்டப்பேரவை செயலாராகவும் லோகேஷ் ஷர்மா, கேப்டன் அரவிந்த் குமார் மற்றும் ஜஸ்வந்த் குஜ்ஜார் ஆகியோர் இணை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தல் முடிவுகள் கட்டாயமாக அடுத்து வர இருக்கும் மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இதில் வெற்றியை ஈட்டவதற்கு என்டிஏ கூட்டணியும் இந்தியா கூட்டணியும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ் வசமிருக்கும் ராஜஸ்தானை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பிரதமர் மோடியை நேரடியாக களத்தில் இறக்கி பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கிறது.
அதே நேரத்தில் இராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைக்க ராகுல்காந்தியும் விரிவான பிரச்சார பயணத்தை மேற்க்கொள்ள இருக்கிறார். முதலமைச்சர் அசோக் கெலாட்டும் அதற்கேற்ப கேஸ் விலை குறைப்பு, மகளிருக்கான மானியம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தனது வார் ரூம் பணிகளை சிறப்பாக செய்து காங்கிரஸின் ஆட்சியையும், பாஜகவை வீழ்த்தும் போர்க்களத் தலைவர் எனும் பெருமையையும் சசிகாந்த் செந்தில் தக்க வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிக்க|| 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு
கீழடியில் நடத்தப்பட்ட 9ம் கட்ட அகழாய்வில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சூது பவளம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
9 ஆம் கட்ட அகழாய்வு
கீழடி ஒன்பதாம் கட்ட அகழாய்வில் முதன் முறையாக அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சூதுபவளம் கண்டறியப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 9ம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை ஆகிய இரு தளங்களில் கடந்த ஏப்ரல் 6ல் தொடங்கி நடந்து வருகிறது.
கொந்தகை தளத்தில் 9ம் கட்ட அகழாய்வில் இரண்டு குழிகளில் இதுவரை 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டு அதில் 14 தாழிகளில் உள்ள மண்டை ஓடுகள், சுடுமண் பானைகள் உள்ளிட்ட பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன. முதுமக்கள் தாழியினுள் உள்ள எலும்புகள் மற்றும் சுடுமண், பானைகளில் உள்ள உணவு பொருட்கள் மதுரை காமராஜர் பல்கலை கழக மரபணு பிரிவு ஆய்வு செய்து வருகிறது.
145 தாழிகள்
கொந்தகை தளத்தில் இதுவரை நடந்த அகழாய்வில் மொத்தம் 158 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. நேற்று 145வது முதுமக்கள் தாழியினுள் உள்ள பொருட்களை வெளியே எடுக்கும் பணி நடந்து வந்தது. இதில் 17.5 செ. மீ ஆழத்தில் ஆய்வு செய்த போது தாழியினுள் 1.4 செ.மீ நீளமும், இரண்டு செ.மீ விட்டமும் கொண்ட இரண்டு சூதுபவளங்கள் (கார்னிலியன்) கண்டறியப்பட்டுள்ளது.
கீழடியில் ஏற்கனவே ஆறாம் கட்ட அகழாய்வின் போது பன்றி உருவம் பதித்த சூதுபவளம் கண்டறியப்பட்டு கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின் கடந்த 8ம் கட்ட அகழாய்வில் 80வது முதுமக்கள் தாழியினுள் 74 செந்நிறம் கொண்ட சூதுபவளங்கள் கண்டறியப்பட்டன. தற்போது கிடைத்த இரண்டு சூதுபவளங்களில் ஒன்றில் மேலும் கீழும் தலா இரண்டு கோடுகளும் நடுவில் அலைகள் போன்ற குறியீடும் வெண்மை நிறத்தில் உள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க|| 800 திரைப்படம் 5 ஆண்டுகள் உழைப்பு - முத்தையா முரளிதரன் பேச்சு