மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்… ரெய்டு பீதியில் கதிகலங்கியிருக்கும் மாஜிக்கள்!!
மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

உதகையில் உள்ள ஆதரவற்றோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள சிலர் தங்களது தனி திறன் காட்டி வாழ்வில் மன வலிமையிழந்த பலருக்கும் தன்னம்பிக்கை மனிதர்களாய் காட்சி தருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து திரும்பி பார்க்க வைத்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகள் உள்ள நிலையில், ஒரு சில விடுதிகள் மட்டுமே நல்ல பயன்பாட்டில் இருந்து வருகிறது.
அந்த வகையில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகை முள்ளிக்கொரை பகுதியில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் பசுமை மற்றும் கல்வி அறக்கட்டளை நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதி உதகை நகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இங்கு வயது முதிர்ந்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், குடும்பத்தாரால் ஒதுக்கப்பட்டவர்கள் என 89 பேர் தங்கியுள்ளனர்.
சிலர் கேரளா, கர்நாடகா, கோயமுத்தூர், மேட்டுப்பாளையம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், பல மாவட்டங்களில் இருந்தும் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் அவர்களை விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். அவர்கள் திக்கு திசை தெரியாமல், சாப்பாட்டுக்கும், தூங்குவதற்கும் இடமின்றி கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
அவர்களை அப்துல் கலாம் அறக்கட்டளை தன்னார்வலர்கள் இனம் கண்டு விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை பராமரித்து வருகின்றனர்.
அவர்களில் சிலர் அவர்களது தனி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை சந்திக்க சென்ற போது, முத்துச்செல்வன் என்பவர் அழகான ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார்.
இவர் குறித்து அறக்கட்டளையின் தலைவர் தஸ்தீகிரிடம் விசாரிக்கும் போது, அவர் குன்னூர் பழைய அருவங்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி, அன்னம்மாள் தம்பதியினரின் கடைசி மகனான முத்து செல்வன். இவர் ஒரு ஓவியர் பக்கவாதத்தால் ஒரு கால் செயல் இழந்த நிலையில், முடங்கி போனார். கவனிப்பாரற்று இருந்த நிலையில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்துள்ளார். இவர் வந்து ஓராண்டுக்கு பிறகே இவர் ஓவியர் என்பது தெரியவந்தது என அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் தெரிவித்தார். அதன் பிறகு முத்து செல்வனிடம் ஓவியங்கள் வரைய பெயிண்ட், பிரஸ், ஓவியம் வரையும் தாள் உள்ளிட்ட பொருட்களை அவருக்கு வாங்கி கொடுத்து ஓவியம் வரைய அவரை ஊக்குவித்துள்ளார்.
அதன் பின்னர் முத்து செல்வன் வரைந்த ஓவியங்கள் அந்த இல்லத்தையே அலங்கரிக்க துவங்கியுள்ளது.
இதுகுறித்து முத்து செல்வன் கூறுகையில், ஆதரவற்றோர் இல்லத்திற்கு தனது நண்பர்கள் அழைத்து வந்து விட்டதாகவும், இங்கு உள்ளவர்கள் தன்னை ஊக்கப்படுத்தியதால், ஓவியங்களை வரைந்து வருவதாக கூறினார். மேலும் தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள தனித் திறமைகளை கண்டுபிடித்து அவர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கூறிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் புகைப்படத்தை தற்போது ஓவியமாக வரைந்து வருவதாகவும் அதனை அவரிடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அறக்கட்டளையின் தலைவர் தஸ்தகீர் கூறுகையில், ஆதரவற்றோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் உள்ள நிலையில் அவர்களுக்கென பல தனிதிறமைகள் உள்ளது. அனைவருக்கும் எடுத்துக்காட்டாக முத்துச்செல்வன் இருந்து வருகிறார். இவர் தற்போது வரை 35க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து உள்ளார். இவரைப் போன்ற தனித்திறமைகளை உள்ளடக்கிய மாற்றுத் திறனாளிகளை வெளி உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: என்.ஐ.ஏக்கு ரகசிய வந்த கடிதம்.... நாடு முழுவதும் எச்சரிக்கை விடுத்த என்.ஐ.ஏ.....
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையில் ஈபிஎஸ் , ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியே சந்தித்தது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபி டித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் அதிமுக தரப்பில் இருந்து ஈபிஎஸ் அணி கே.எஸ். தென்னரசையும், ஓபிஎஸ் அணி செந்தில் முருகனையும் அறிவித்தது.
ஈபிஎஸ்சை மறுத்த தேர்தல் ஆணையம் :
ஆனால், அதிமுக பொதுக்குழு வழக்கு இன்னும் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அதிமுக பொதுக்குழு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்குமாறு ஈபிஎஸ் தரப்பு மனுதாக்கல் செய்தனர். இதற்கு ஓபிஎஸ்சிடம் பதில் கேட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்ததால், ஈபிஎஸ் சின் மனுவை ஏற்க கூடாது என்று ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதனிடையே தேர்தல் ஆணையம் எடப்பா டி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்க மறுத்துவிட்டது.
அண்ணாமலை சந்திப்பு :
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக தரப்பில் இருந்து இரண்டு அணிகளாக போட் டியிடவுள்ள ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் தனித்தனியே நேரில் சந்தித்து பேசினார். இந்திய தேர்தல் ஆணையம் எடப்பா டி பழனிச்சாமியின் மனுவை நிராகரித்த நிலையில், நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
சி. டி.ரவி பேச்சு :
பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அதற்கு முன்னதாக, பாஜக மேலிட பொறுப்பாளர் சி. டி.ரவி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தீயசக்தி திமுகவை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோற்க டிக்க வேண்டும், அதற்காக அதிமுகவை ஒருங்கிணைக்க தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று கூறினார்.
அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் :
அதன்பின் பேசிய அண்ணாமலை, சொத்துவரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை ஏற்றி தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கும் திமுகவை தோற்க டிக்க வேண்டுமென்றால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் உறுதியான, நிலையான, வலுவான ஒரு வேட்பாளர் தேவை. அதற்கு அதிமுக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதனால் தான், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பா டி பழனிசாமியையும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் நேரில் சந்தித்து தனித்தனியாக நிற்காமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வந்ததாக கூறினார்.
ஒரே வேட்பாளர் :
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவின் நிலைப்பாடு எதிர்க்கட்சியாக தனித்தனியாக நிற்காமல் ஒரே கட்சியாக இருந்து, ஒரே வேட்பாளரை நிறுத்தி திமுகவை ஜெயிக்க வேண்டும் என்பது தான் அகில இந்திய பாஜகவின் கருத்தும் கூட என்று அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கனவே, அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், இரட்டை இலை சின்னம் யார் பக்கமோ அவர்களுக்கு தான் எங்கள் ஆதரவு என்றும் அதிமுக தோழமை கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில், இன்று பாஜகவும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற அதே நிலைப்பாட்டை தான் அதிமுகவுக்கு தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
புலவர், கவிஞர், அறிஞர் எனப் பல பெயர்களைத் தாங்கிய சான்றோர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் புகழ் பெற்றிருந்தாலும் பேரறிஞர் என்றதும் நினைவுக்கு வரும் ஒரே பெயர் அண்ணா. தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணாவின் 54-வது நினைவு நாளில் அவரை நன்றியுடன் நினைவுகூர்கிறது இந்தச் செய்தித் தொகுப்பு....
காஞ்சிபுரம் தந்த பகவலவன்:
தமிழ்நாட்டிற்கு காஞ்சிபுரம் ஆன்மிகத்துக்கு ஒரு மடத்தை மட்டும் தரவில்லை. அரசியலுக்கு ஒரு மன்னனையும் கொடுத்தது. மகளிர் ஆசை கொள்ள பட்டை மட்டும் தரவில்லை. மறத்தமிழர்கள் விழிப்புகொள்ள ஒரு பகலவனையும் கொடுத்தது.
தீந்தமிழின் மரபுவாசலைக் காக்க:
அண்ணாதுரை என்று பெயர் பெற்ற அந்த அருந்தமிழ்க் காற்று, காஞ்சிபுரத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சீர்தூக்க 1909-ம் ஆண்டு பிறந்தது. தீந்தமிழின் மரபுவாசலைக் காத்த தலைவனை வரகுவாசல் சுமந்தது. அதன் புழுதிகளில் விளையாடிக் களித்த அண்ணாதுரை, மண் தன்மேல் படிந்ததுபோலவே தன்னை மண்ணுடன் பதித்துக் கொண்டார். நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுறுத்துவார்களே, அதை மெய்ப்பிக்க தமிழ்த்தாய் மகிழ்ந்து களித்த நிலத்திற்குத் ஜனவரி 14-ம் தேதி 1969-ம் ஆண்டு ‘தமிழ்நாடு’ என்று உண்மையிலேயே நல்ல பெயர் வாங்கி கொடுத்தார் அண்ணா.
பழமைவாதத்தை எதிர்த்து:
பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் போர்வாளாக அண்ணா விளங்கினார். அரசியல் பாடத்தைப் பெரியாரிடம் அவர் கற்ற போதிலும், அன்பில் இறைவனைக் காணும் தத்துவத்தில் வேறுபட்டார். அதனால் அவர் வளர்ந்த நீதிக்கட்சிப் பாசறையை நீங்கினார். திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, தமிழரின் முன்னேற்றத்தைத் தம் கடமையாகக் கொண்டார். தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அண்ணா படித்தார். அதில் மக்கள் முன்னேற்றத்திற்கு ஒவ்வாத பழமைவாதத்தைத் துணிந்து எதிர்த்தார். பேச்சாற்றலில் தனித்துவத்தைக் காட்டி அரங்கங்களில் கோலோச்சிய அரசர் பேரறிஞர் அண்ணா.
தீச்சொற்களை சுட்டெரித்த..:
சோம்பலைச் சுட்டெரிக்கும் தீச்சொற்களை உதிர்த்த அண்ணாவின் நாவு சொல்லித் தந்த மந்திரமான ”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்பதுதான் இன்றளவும் உழைக்கும் மக்களின் உயிர்த்துடிப்பாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
தத்துவ குரு:
”ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று போதித்த தத்துவ குரு அண்ணா. இந்தி திணிக்கப்பட்டபோது போர்க்கொடி தூக்கி அதன் ஆதிக்கத்தைத் தவிடுபொடி ஆக்க தீப்பொறி கசிந்த தீப்பந்தம் அண்ணா. எதிர் தரப்பினரும் விரும்பிக் கேட்கும் அளவு கண்ணியமும் கவித்துவமும் மிக்க பேச்சுக்கனல் அண்ணா. இருமொழித் திட்டத்தை ஈடேற்றி, மும்மொழிக் கொள்கையின் முனை உடைத்த மொழிப்பற்றாளன் அண்ணா.
வலுவான அச்சாரம்:
திமுக என்னும் மூன்றெழுத்து தமிழ்நாட்டில் இன்று நீக்கமற நிறைந்திருப்பதற்கு, தம் அரசியல் சாதுர்யத்தால் பெரும் அச்சாரம் இட்டது அண்ணா என்னும் மூன்றெழுத்துதான்.
காரியகர்த்தா:
திராவிட நாட்டுக் கொள்கையில் முதலில் தீர்க்கமாக இருந்த அண்ணா, பின்னர் மாநில சுயாட்சியை வலியுறுத்தி, இன்றைக்கு நமக்கிருக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார். கதை, கவிதை, நாடகம், சினிமா, பாடல், கட்டுரை, மேடைப் பேச்சு என்று அண்ணா தொடாத இலக்கிய வகைமையே கிடையாது. தனக்குள் சுடர்விட்டு எரிந்த கொள்கை நெருப்பை மக்களிடம் சேர்க்க அனைத்து ஊடகங்களையும் கச்சிதமாக பயன்படுத்திய அண்ணா – காரியகர்த்தா.
புகழுடன் பூவுலகு:
தோன்றிற் புகழுடன் தோன்றுக என்று கூறிய வள்ளுவரின் வாக்கினை ஒருபடி மேலேற்றி, தாம் மறைந்தபோதும் அழியாப் புகழுடன் பூவுலகைப் பிரிந்தார் அண்ணா. உலக அளவிலேயே ஒருவரது இறுதி ஊர்வலத்தில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் கலந்துகொண்ட நிகழ்வு, 53 ஆண்டுகளுக்கு முன், 1969-ம் ஆண்டு அண்ணாவை வீர சொர்க்கத்திற்கு வழியனுப்பிய இதே நாளில்தான் நடந்தது.
ஏற்றி வைத்த விளக்கு:
குறுகிய நேரமே சுடர்ந்தாலும் குன்றின்மீது ஏற்றி வைத்த விளக்கு ஊருக்கே ஒளி தருவதுபோல் அண்ணா விதைத்துச் சென்ற நெருப்பின் பயத்தில் அச்சுறுத்தும் இருள் இன்றும் நெருங்க பயந்து அடங்கி நிற்கிறது. அந்தச் சூரியனின் குலம்தான் இன்று தமிழ்நாட்டில் விடியலைக் கொண்டுவர உழைத்துக் கொண்டிருக்கிறது.
அண்ணா சாலை, அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா சதுக்கம், அண்ணா நகர் என இனி எக்காலத்திலும் தமிழ்நாட்டையும் அண்ணாவையும் பிரிக்க முடியாதபடி ஆழ விதையாய் ஆகி, மெரினாக் கடற்கரையில் உறங்குகிறார் அண்ணா. கடலைத் தாண்டி வரும் காற்றை நுகர்ந்து பாருங்கள், அது வீசும் சுறுசுறுப்பின் வாசம் பேரறிஞர் அண்ணாவுடையது. அது தரும் இனமான உப்பு, நம் வாழ்வில் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டியது.
அண்ணாவைப் போற்றுவோம்!
-நப்பசலையார்
இதையும் படிக்க: காலமானார் பழம்பெரும் இயக்குநர் விஸ்வநாத்...!
இன்று பிறந்தநாள் காணும் சிம்புவிற்கு ஏன் இத்தனை பெண் ரசிகைகள் என காணலாமா?
ஒரு ஆண் நடிகருக்கு ஆண் ரசிகர்கள் இருப்பது ஒரு சாதாரணமான விஷயமாக இருக்கலாம். அவரது ஸ்டைல், நடிப்பு, பஞ்ச் வசனங்கள் என அனைத்துமே அனைத்து இளைஞர்களையும் ஈர்க்கும் வகையிலேயே இருக்கும் என்பதால், அவர்களைக் கடவுள் போலவே ஆண் ரசிகர்கள் கும்பிடுவார்கள்.
அதே போல அழகான இளைஞருக்கு பெண் ரசிகைகள் அவரது படத்தின் கதாபாத்திரத்திற்காக உருவாகி அவ்வப்போது மறைவது தான் வழக்கம். அதுவே அந்த நடிகர் பெண்களுக்கு எதிராக பேசினாலோ, தனது படத்தில் ஏதாவது ஒரு வசனத்தில் தவறாக பெண்களை சித்தரித்தாலோ அந்த நடிகர் மீதான அன்பு அனைத்தும் வெறுப்பாக மாறி அவரை எதிர்க்கவே தொடங்கி விடுவார்கள்.
மேலும் படிக்க | இந்தி இல்லாமல் வாழ முடியுமா...? பிரபல இயக்குனர் கேள்வி...!
ஆனால், பெண்களை மிகவும் தவறாக சித்தரிக்கும் ஒரு பாடலையே உருவாக்கிய பிறகும், அவரது பெண்கள் ரசிகர் கூட்டம் சிறிது கூட குறையாத ஒரே ஸ்டார், முன்னாள் லிட்டில் சூப்பர் ஸ்டாரான ஆத்மன் சிலம்பரசன். மனதளவில் கோவிலே கட்டி கும்பிடும் இந்த ஆத்மன் சிம்புவுக்கு உண்மையான ரசிகர்களும், இவ்வளவு விசுவாசமான பெண் ரசிகைகளும் உருவாக என்ன காரணம் தெரியுமா?
அவரது உண்மை தன்மை தான்!
மேலும் படிக்க | சிம்புவின் திருமணம் எப்போ? டி.ராஜேந்தரின் பதில் என்ன?
தனது மனதிற்கு தோன்றிய அனைத்தையும் அப்படியே ஒளிவு மறைவு ஏதுமின்றி கூறும் ஒரே நடிகர், அன்றும் இன்றும் என்றும் சிம்பு மட்டுமே! பெரிய நடிகர், இயக்குனர்களுக்கு பயந்து எதிர்ப்பு தெரிவிக்காமல் என்ன கூறினாலும் அமைதியாக நடித்து விட்டு செல்வதை விட்டு, தனது அனைத்து கருத்து வேறுபாடுகளையும் வெளிப்படுத்தும் ஒரு நடிகர் யார் என்றால், அது நடிகர் சிம்பு தான்.
சிறு வயதிலேயே இயக்குனராகி, தனது பன்முகத் தன்மையால் உலக அளவில் பிரசித்தியான ‘ஏகான்’ என்ற பிரபல இசைக் கலைஞருடன் இணைந்து ‘லவ் ஆந்தம்’ என்ற பாடலை வெளியிட்டு, உலகில் உள்ள பல மொழிகளில் ‘காதல்’ என்ற வார்த்தை வைத்து உருவாக்கி உலகத்திற்கு அன்பின் முக்கியத்துவத்தை புகட்டினார்.
மேலும் படிக்க | ‘பத்து தல’ பாம்பா, மார்ச் 30 வரப் போகிறார் ‘ஆத்மன்’ சிலம்பரசன்...
அவரது சொந்த காதல் வாழ்க்கை பல கரடு முரடான பாதைகளாக, முட்பாதையாக அமைந்திருந்தாலும், அவரது அன்பை என்றும் ஏசாத தனது ரசிகர்களுக்காக அனைத்து வீழ்ச்சிகளையும் கடந்து, மீண்டும் எழுந்து சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்த சிம்புவின் படங்களில், பெண்களை போற்றும் விதம் வித்தியாசமாக இருக்கும்.
ஏன் என்றால், அதில் எதார்த்த தன்மை இருக்கும்!
ஒரு பெண் என்றால், அவளை தேவதையாக பாவித்து அவளுக்காக உயிரையும் கொடுக்கும் மற்ற நடிகர்களின் கதைகளுக்கு மத்தியில், எதார்த்தமாக காதலை வெளிப்படுத்தி பெண்களும் சக மனிதர்கள் என் காட்சிப்படுத்தி, அவர்கள் மீது காதல் கொள்ளும் அனுபவங்களையும் முடிந்த அளவு உண்மை தன்மையுடன் வெளிப்படுத்துவார்.
மேலும் படிக்க | தீ... தளப‘தீ’... வெளியானது இரண்டாவது சிங்கிள்... பொங்கலுக்கு ஒரு பலே தீபாவளி காத்திருக்கு...
அது மட்டுமின்றி, தனது பெண் தோழி, தங்கை, காதலி என அனைவருக்கும் ஏற்றது போல தனி தனி சிறப்பிடம் தனது மனதில் கொடுத்திருந்தாலும், அனைவரிடத்தும் உண்மையான பாசம் வைத்த கதாபாத்திரமாகவே நடித்திருப்பார், சிம்பு. மேலும், காதலில் காமம் எவ்வளவு பெரிது எனவும் உண்மைத் தன்மையைக் காட்டி, இளைஞிகளின் மனதை கவர்ந்திருப்பார்.
இவ்வளவு ஏன், பெண்களை தவறாக கூறுவதாக சொல்லப்படும் ‘பீப் சாங்க்’கில் கூட, பொண்ணுங்கள திட்டாத மாமா.. உன்ன நீயே திட்டிக்க மாமா... என்று தான் பாடியிருப்பார். இது உண்மையான சிம்பு ரசிகைகளுக்கு நன்றாக தெரியும்.
மேலும் படிக்க | சித் ஸ்ரீராமுக்கு சிம்பு எவ்வளவோ பரவாயில்ல... துள்ளி குதிக்கும் டாலிவுட் ரசிகர்கள்...
சிம்புவின் அழகு, திறன் தாண்டி, அவரது வெள்ளை உள்ளம் தான் உண்மையில், 3 தசாப்தங்களாக பெண்களை மட்டுமல்லாமல், இளைஞர்கள் அனைவரையும் சுண்டி இழுத்துள்ளது. அத்தகைய சிம்புவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
மேலும் படிக்க | சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??
சமீபத்திய ஆராய்ச்சிகளில் மனித நரம்புக்குள் மைக்ரோப்ளாஸ்டிக் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்பை போல இல்லை. தற்போதெல்லாம் உணவு பொட்டலங்களில் அதுவும், ப்ளாஸ்டிக் பொட்டலங்களில் தான் வருகின்றன. ஆனால், அது வெறு வெளியில் இருக்கும் பாக்கெட்டுகள் தானே, அதில் என்ன என அலட்சியமாக விட்டு விட முடியாது. ஏன் என்றால், அந்த ப்ளாஸ்டிக் ஆனது அணு அளவிலும் உடைந்து மட்காததாக இருக்கிறது என்பது தான் அதன் சிறப்பாம்சமே.
அப்படிப்பட்ட ப்ளாஸ்டிக் நுன்துகள்கள் நமது உணவோடு கலந்து, நமது மனித ரத்த ஓட்டத்தில் கலந்துள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மை அது தான். மேலும் இந்த உண்மையை ஆராய்சியாளர்கள் நிரூபித்துள்ளனர் என்று கூறுவதை விட, தற்போது தான் ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்துள்ளனர் என்றே சொல்லலாம்.
மேலும் படிக்க | பட்ஜெட்2023: ஒரு பார்வை!!
இங்கிலாந்தில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கற்பிக்கும் மருத்துவமனிகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, பல்கலைகழக மாணவர்கள் மற்றும் கல் யார்க் மருத்துவ பள்ளி சேர்ந்த மாணவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்துள்ளனர்.
மனிதர்களின் Saphenous Vein Tissue எனப்படும் சஃபீனஸ் சிரை திசு, கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை நடத்தும் ஒரு திசு குழுவாகும். அந்த திசு குழுவை எடுத்து ஆராய்ந்த போது, அதில் பல ப்ளாஸ்டிக் நுன்துகள்கள் இருந்துள்ளது.
மேலும் படிக்க | "பெண் சக்தியால் எப்படி வலுவான தேசத்தை கட்டியெழுப்ப முடியும்....." பட்ஜெட் குறித்து ஸ்மிருதி!!!
அதாவது ஒரு கிராம் திசுக்குள் சுமார் 15 மைக்ரோ ப்ளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மிக முக்கியமான உள்ளடக்கிய ப்ளாஸ்டிக் என்னவென்றால்:
வார்னிஷ், எனாமெல், சிந்தடிக் பெயிண்டுகளில் காணப்படும் அல்கைட் பிசின்
நைலான் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் பயன்படுத்தபடும் பாலிவினைல் அசிடேட் (PVAC) மற்றும்
நெகிழ்வான பேக்கேஜிங் பொருட்களில் பயன்படுத்தப்படும் EVOH மற்றும் EVA ஆகியவை.
இந்த திசுக்கள் பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக இருக்கும் நோயாளின் உடலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அவர்களுக்குள் இவ்வளவு ப்ளாஸ்டிக் நடப்பது பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய திரைப்பயணம்..... ஜெயிலரில் ரஜினியுடன்......
இது வரை, மைக்ரோப்ளாஸ்டிக் துகள்கள் உடலில் உள்ள உயிரியல் அணுக்கள் மற்றும் தடுப்புகளைத் தாண்டி நுழைய முடியுமா என்ற கேள்வி கூட எழுந்தது இல்லை. இந்நிலையில், இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | ”தேர்தலே நோக்கம்... ஒவ்வொரு பிரிவையும்... அடிக்கப்பட்ட பழைய பறை....” பட்ஜெட்2023 எதிர்ப்பும் ஆதரவும்!!!