மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்… ரெய்டு பீதியில் கதிகலங்கியிருக்கும் மாஜிக்கள்!!
மொத ஆளாக மாட்டிய மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்

ஒடிசாவில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இரயில் விபத்து 280க்கும் மேற்பட்ட நபர்களின் உயிரை பலி வாங்கியுள்ளது. இந்நிலையில் கவாச் எனும் சிஸ்டம் இருந்திருந்தால் இதனை தடுத்திருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர். கவாச் சிஸ்டம் என்றால் என்ன? அது எப்படி செயல்படும் ? என்பதை பற்றி இந்த செய்தியில் சிறு குறிப்புகளாக பார்ப்போம்.
* கவாச் (Kavach) என்பது இந்திய ரயில்வேயின் தானியங்கி ரயில் பாதுகாப்பு கருவியாகும்.
* இது முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் ஆகும்.
* இந்த தொழில்நுட்பத்தை ரயில்வேயின் வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான ஆர்டிஎஸ்ஓ உருவாக்கியுள்ளது.
* ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ரயில்வே தனது சொந்த தானியங்கி ரயில் பாதுகாப்பு சாதனம் ஒன்றை உருவாக்கி அதற்கு "கவாச்" என்று பெயரிட்டுள்ளது.
* கவாச் என்ற ஹிந்தி மொழி வாசத்திற்கு தமிழில் ‘கவசம்’ என்று பொருள்.
* கவாச் ஆபத்தில் சிக்னல் கடந்து செல்வதையும், அதிக வேகத்தில் செல்வதையும் தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அடர்ந்த மூடுபனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவும்.
* கவாச் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும்.
* இரண்டு ரயில்கள் எதிரெதிர் திசையில் வரும் போது ரயில் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள கவாச் விபத்து தடுப்பு கருவி தாமாக செயல்பட்டு 380 மீட்டருக்கு முன்பாகவே இரண்டு எஞ்சின்களையும் நிறுத்திவிடும்.
* லோகோ பைலட் பிரேக்கைப் பயன்படுத்தத் தவறினால், தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்தும்.
* அதிக வேகம் மற்றும் பனிமூட்டமான வானிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வண்டியில் லைன் சைட் சிக்னலை மீண்டும் செய்கிறது.
* இயக்க அதிகாரத்தின் தொடர்ச்சியான புதுப்பிப்பு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது.
* லெவல்-கிராசிங் கேட்களில் ஆட்டோ விசில் அடிக்கும்
இதையும் படிக்க:ரயில் விபத்து : 99% தமிழர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!
ஒடிசாவில் ஒரே நேரத்தில் 3 இரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 288 பேர் இறந்துள்ளதாகவும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. கொடூரமான இந்த ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பாரக்கப்படுகிறது.
நேற்று மாலை சென்னையில் இருந்து ஹவுராவிற்கு சென்று கொண்டிருந்த கொரமண்டல் விரைவு ரயில் ஒடிசாவின் பாலசோருக்கு அருகில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி தடம் புரண்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் பக்கத்து தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரிலிருந்து ஹவுரா நோக்கி சென்ற இரயில் இதில் மோதியதில் அந்த ரயிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஒரே நேரத்தில் 3 இரயில்கள் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கெடுவாய்யப்பாக சில நேரங்களில் சிக்னல் கோளாரினால் இரண்டு இரயில்கள் மோதி விபத்துகள் ஏற்படுவதுண்டு. ஆனால் இரயில்வே துறையின் வரலாற்றில் 3 இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது இதுவே முதல் முறையாகும். இது இன்றைய இரயில்வே துறை அடைந்திருக்கும் மோசமான நிர்வாக சீர்கேட்டையும் அதிகாரிகளின் அலட்சியத்தையும் வெளிபடுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இரயில் சேவை
பிரிட்டிஷாரின் வருகையோடு இந்தியாவிற்கு அறிமுகமான இரயில் சேவையானது பல்வேறு மன்னராட்சி பிரதேசங்களாக இருந்த இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியது. வேகமான சரக்கு போக்குவரத்திற்கும் பயணத்திற்கும் இந்த இரயில் சேவையே ஆதாரமாயிருந்தது. மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டத்தில் இரயில்வே துறையின் பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
விரைவான மற்றும் பாதுகாப்பான பயணங்களுக்கு இன்றளவும் முதலிடத்தில் இருப்பது ரயில் சேவைகள் தான். ஆனால், இப்போது நாம் பயணிக்கும் விரைவு ரயில்களும் பாதுகாப்பான இரயில் பயணமும் ரெடிமேடாக நமக்கு கிடைத்தவை அல்ல. பல்வேறு மோசமான விபத்துகளும் அதன் வழி பெற்ற படிப்பினைகளும், தொழில் நுட்ப வளர்ச்சியும் இன்றைய இரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளன. நேற்று இரயில் விபத்தானது அதனை கேள்விக்குள்ளாக்கியது.
ஆங்கிலேயரின் வெளியேற்றத்தின் போது நலிவடைந்திருந்த இரயில்வே துறை மத்திய அரசால் 5 ஆண்டு திட்டங்களின் மூலம் மேம்படுத்தப்பட்டது. நிலக்கரியும், நீராவி இஞ்சினுமாக தொடங்கப்பட்ட இந்த இரயில் சேவை டீசல் என்ஜின், மின்சார இரயில் என வளர்ந்து, இன்று வந்தே பாரத் போன்ற அதிவேக இரயில்களாக உருமாறியுள்ளது. என்றாலும், இரயில் விபத்துகளுக்கும் இந்தியாவில் குறைவில்லை என்றே கூறலாம்.
முக்கிய இரயில் விபத்துகள்
ஆரம்ப காலத்தில் இயற்கை சீற்றங்களான புயல், வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்பட்ட விபத்துகளால் 1950-70 வரையிலான 20 ஆண்டு காலத்தில், 1400க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இதில் ஐதராபாத் யசந்தி ஆற்றுப்பால விபத்து, அரியலூர் மருதையாறு இரயில் பாலத்தில் ஏற்பட்ட விபத்து ஆகியவை பெருமளவு பயணிகளின் உயிர்களை பலி வாங்கின. முக்கியமாக 1964ம் அண்டு, டிசம்பர் மாதம் 23ம் தேதியன்று பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரயில் ஒன்று அப்போது வீசிய சூறாவளியில் சிக்கி கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதில் மட்டும் 126 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
1981ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் தேதியன்று பீகார் மாநிலத்தில் மான்சி மற்றும் சகார்சா இடையே சுமார் 800க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரயில் ஒன்று பாக்மதி எனும் ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் மீட்பு பணிகளில் ஏற்பட்ட தோய்வு காரணமாக சுமார் 750க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இது போன்ற விபத்துகளை எதிர்கொள்ள இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்பை தாங்கும் அளவிற்கு டீசல் என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டதோடு, இரயில் பாதைகள், பாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் முறைப்படுத்தபட்டன. 1985ல் நீராவி என்ஜின்கள் முற்றிலுமாக பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.
1981க்கு பின்னர் இயற்கை சீற்றங்களால் இரயில் விபத்துகள் ஏற்படுவது குறைந்து, இரு ரயில்கள் மோதிக்கொள்ளும் விபத்துகளே பெரும்பாலும் நடைபெறத் தொடங்கியது. குறிப்பாக,1995ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி புது டெல்லியிலிருந்து பூரி சென்றுக்கொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் சுமார் 305 பயணிகள் வரை உயிரிழந்தனர்.
பின்னர், 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி கொல்கத்தாவிலிருந்து ஜம்மு நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரயில் ஏற்கெனவே தடம் புரண்டு இருந்த ஃபிராண்டியர் கோல்டன் டெம்பிள் மெயில் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர். இவையெல்லாம் பெரும் பாலும் இருரயில்கள் மோதிக்கொள்ளம் விபத்துகளாக இருந்தவையே.
பின்னர், இரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதும் சிக்னல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட வளர்ச்சியும் இந்த மாதிரியான விபத்துகளை குறைத்தன. மேலும் தொழில் நுட்ப வளர்ச்சியால் 2000க்கு பிறகு இரயில் விபத்துகள் பெருமளவு குறைந்திருந்தது. ஆங்காங்கே மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகளே பெரும்பாலும் ஏற்பட்டன. 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது சொந்த ஊரை நோக்கி சென்ற தொழிலாளர்கள் சிலர் இரயில் தண்டவாளத்தில் உறங்கியபோது 16 பேர் பரி்தாபமாக உயிரிழந்தனர். இது தான் இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்த பெரிய இரயில் விபத்தாகும்.
இரயில்வே அமைச்சர்கள் இராஜிநாமா
1956ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்றுக்கொண்டிருந்த முத்துநகர் இரயில் மருதையாற்றில் திடீரென உருவான காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியதில் இரயில் ஆற்றோடு அடித்து செல்லப்பட்டது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏற்கனவே இரயில்கள் ஆற்றில் கவிழும் விபத்துகள் அதிகரித்து வந்த நிலையில் இந்த விபத்து நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விபத்திற்கு பொறுப்பேற்று இந்தியாவின் முதல் இரயில்வே துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினார். அவரோடு இரயில்வே இணையமைச்சராக இருந்த அழகேசன் கூட தனது பதவியை இராஜிநாமா செய்தார்.
இதேபோல, 1999 ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று மேற்கு வங்கத்தின் கைசல் ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த அவத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது, பிரம்மபுத்திரா மெயில் மோதியது. இதில் 285 பேர் உயிரிழந்தனர். இதனை ஒட்டி அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இரயில்வேதுறை அமைச்சராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை இராஜினாமா செய்தார். மேலும் 2000த்தில் மம்தா பானர்ஜி 2017ல் சுரேஷ் பிரபு போன்றோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர் என்றாலும் அவை ஏற்கபடவில்லை.
இந்நிலையில் நேற்று ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரயில்வே அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என கோரியுள்ளார்.
தொடக்க காலத்தில் இந்தியாவில் பின்தங்கிய தொழில் நுட்பத்தாலும் முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாதாலும் விபத்துகள் ஏற்பட்டது எதார்த்தமானதே. ஆனால் மின்மயமாக்கப்பட்ட பாதை, இன்டர்லாக்கின் சிக்னல்கள், ஜிபிஎஸ் தொழில்நுட்பம் என வளர்ந்து விட்ட இக்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடப்பதை வெறும் தொழில்நுட்ப கோளாறு என்று மட்டுமே கூறி கடந்து விட முடியுமா?
-ச.பிரபாகரன்
இதையும் படிக்க:”கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல, கடுந்தன்மை” கொந்தளித்த அன்புமணி !
பெண்கள் எப்போதுமே தங்களை அழகாகவும் வசீகரமாகவும் காட்டிக்கொள்ள விரும்புவர். பொதுவெளியில் பலர் தன்மேல் தனி கவனம் செலுத்த வேண்டும் என்பதே பல பெண்களின் பிரியமாக இருக்கும். தங்களின் அழகை மெருகேற்ற பல அழகு சாதன பொருட்கள் பயன்படுத்துவர்.
அழகு ஒருபுறம் இருக்க, உடல்வாகும் ஒருவித வசீகர தோற்றத்தை காண்பிக்கும் என்பதால், தற்போதெல்லாம், சற்று உடல் பருமனாக உள்ள பெண்கள் தங்களை மெலிதாக காட்டிக்கொள்ள ' ஷேப்வியர் ' அணிந்து கொள்கின்றனர். பெரும்பாலும் பார்ட்டி வியர்கள் அணியும்போது ' ஷேப்வியர் ' அணிவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
ஷேப்வியர்கள் அழகுக்கு மெருகூட்டினாலும், ஆரோக்கியம் என்று வரும்போது ஆபத்தாகவே இருக்கிறது எனலாம். ஏனெனில், ஷேப்வியர்கள் என்றாலே பருமனான தேகத்தை சுருக்கி மெல்லியதாய் காட்டவே வடிவமைக்கப்பட்டவை. அதற்காக உடல் சதைகளை சற்று அழுத்தி சுருக்கி காண்பிக்கும். இதனால் பெண்களின் வயிற்று பகுதியில் உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றன. அதோடு, வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதோடு, தசைகள் தளர்வின்றி மறத்துப்போகும் நிலை உருவாகும்.
மேலும், ஷேப்வியர் அணியும்போது சிறுநீர் கழிப்பதில் அசௌகரியம் ஏற்படும். இதனால் பெரும்பாலும் இதனைப் பயன்படுத்தும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிப்பதையே தவிர்க்கின்றனர். இதனால் வரும் பின்விளைவுகளை அவர்கள் அறிவதே இல்லை. நீண்டநேரம் சிறுநீர் கழிக்காமல் இருப்பதால் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், சிறுநீர் பையில் மட்டுமல்லாது, நுரையீரல் பிரச்சனைகளும் ஏற்படும் அபாயம் உண்டு. ஏனெனில், வயிற்று பகுதி தசைகளில் அதிக இறுக்கம் ஏற்படுவதால் நுரையீரல் செயல்பாடு பாதிப்படைந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சுவாச பிரச்சனைகள் வெகுவாக வரும்.
சீரான ரத்த ஓட்டம் என்பது உடலின் செயல்பாடுகளுக்கு அவசியமானதாகும். ஆனால், ஷேப்வியர் பயன்படுத்துவதன் மூலமாக ரத்த ஓட்டத்தின் சீர் நிலையை தடுக்கிறோம் என்பது தான் உண்மை. தசைப்பகுதிகள் அழுத்தம் கொடுப்பதால் அந்த பகுதிகளுக்கு அதிகமாக ரத்த அழுத்தம் தேவைப்படும். அப்போது இதயத்திலிருந்து அந்த பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகமாக கடத்தப்படும். அப்போது தேவையற்ற ரத்த கட்டிகள் உருவாக காரணமாகலாம். இதனாலும் பின்னாளில் உடலில் பிரச்சனைகள் வரலாம்.
இதையும் படிக்க | அமெரிக்காவிற்கு முன்பே இந்தியாவில் வெளியாகும் இந்தியானா ஜோன்ஸ்!b
ஷேப்வியர் பயன்படுத்தும்போது, வயிற்றில் உள்ள தசைகள் குறுக்கப்படுவதால் உள்ளுறுப்புகளில் குடல் பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு செரிமான கோளாறு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், ஷேப்வியர் அடிக்கடி அணிவதால் தசைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தமும் தளர்வும் தசைகளை வலுவிழக்கச்செய்கின்றன.
இதனால் இயல்பாக வேலைகளை செய்ய இயலாமல் அவதிப்படும் நிலை உருவாகும். அழகுக்காக முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்ற பெயரில் ஆரோக்கியத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஷேப்வியர்களை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது.
' அழகு என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் தான் ' என்பதை பெண்கள் உணரவேண்டும். அழகை ஆராதிப்பதை விட ஆரோக்கியத்தை ஆரத்தழுவிக்கொள்வதே சாலச்சிறந்தது.
இதையும் படிக்க | ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டிவந்த பெண்களுக்கு 'வெள்ளி நாணயம்'...இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறையினர்!
மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல, கடுந்தன்மை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கர்நாடகவில் யார் முதலமைச்சர் என்ற பல்வேறு குளறுபடிகளுக்கு பின்னர் கர்நாடகாவின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். ஆனால், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலே அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு எப்போதும் ஒத்துழைப்பு நல்காது என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். மேலும், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பேசிய கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் டி.கே.சிவக்குமாரின் பேச்சினை சுட்டிக்காட்டி, கேள்வி கணைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ”தமிழ்நாட்டின் மீது எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. தமிழக மக்கள் எங்கள் சகோதர, சகோதரிகள். நாங்கள் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் காவிரி நீரைத் தடுக்க அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகமும் வீணாக அடித்துக் கொண்டு நீதிமன்றத்திற்கு செல்வதை நிறுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட ஒத்துழைக்க வேண்டும்” என்று கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாரி பேச்சை சுட்டிக்காட்டிய அவர், கர்நாடக துணை முதலமைச்சரின் ஒவ்வொரு சொல்லிலும் பெரும் இனிப்பு கலந்திருப்பதாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிக்க : ’மாமன்னன்’ திரைப்படம் அல்ல, நிஜம்” -வடிவேலு பேச்சு!
தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை நீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதிக்காது. தமிழகத்தை பகைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது எந்த காலத்திலும் நடக்காது. அதனால் தான் தமிழகத்தை புகழ்ந்து, ஏமாற்றி அனுமதி பெற்று அணை கட்டுவதற்கான முயற்சிகளில் கர்நாடகம் ஈடுபட்டிருக்கிறது. கர்நாடகத்தின் இந்த வஞ்சக வலையில் தமிழ்நாடு ஒருபோதும் விழுந்து விடக்க்கூடாது என்று கூறியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு பெருந்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறார். கடந்த காலங்களில் காவிரி விவகாரத்தில் கர்நாடகம் என்றாவது பெருந்தன்மையுடன் நடந்து கொண்டிருக்கிறதா? என்பதை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 1991-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் ஆண்டுக்கு 205 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது. அதை எதிர்த்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய கலவரம் வெடித்தது. தமிழர்களின் சொத்துகளும், வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு பலநூறு கோடி. பெங்களூருவில் மட்டும் 16 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரங்களை அப்போதிருந்த காங்கிரஸ் முதலமைச்சர் பங்காரப்பா ஊக்குவித்தார். இது தமிழர்கள் மீதான பெருந்தன்மையா? என்றும் வினவியுள்ளார்.
2016-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வாடிய பயிர்களைக் காக்க வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்போதும் தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமான 50 ஆம்னி பேருந்துகள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிருக்கு அஞ்சி வெளியேறினார்கள். இப்போதைய உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தான் அப்போதும் உள்துறை அமைச்சர். இப்போதைய துணை முதலமைச்சர் சிவக்குமார் தான் அப்போதும் செல்வாக்கு மிக்க அமைச்சர். ஆனால், அவர்கள் அப்போது தமிழர்கள் மீது பெருந்தன்மை காட்டவில்லை. ஆனால், இப்போது தமிழர்கள் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகி விடும். மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் தமிழ்நாடு காட்ட வேண்டியது பெருந்தன்மை அல்ல... கடுந்தன்மை என்றும், கர்நாடக துணை முதலமைச்சரின் நஞ்சு தடவிய இனிப்பு வார்த்தைகளில் மயங்கி, காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமையை இழந்து விடக் கூடாது என்றும், மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை சட்ட வல்லுனர்களைக் கொண்டு நடத்தி, மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என்றும், அதற்கு மாறாக, கர்நாடகத்துடன் எந்தவிதமான பேச்சுக்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இன்று சென்னை திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சிங்கப்பூர் - ஜப்பான் பயணம் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
மே 28 - ஞாயிற்றுக்கிழமை :
ஒசாகாவில் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த பணியாளர்கள் மிகுந்த அன்புடன் வழியனுப்பினர். ஒசாகா கான்சல் ஜெனரல் திரு.நிகிலேஷ் கிரி அவர்களும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து வழியனுப்பினார். அங்கிருந்து டோக்கியோவுக்கு அதிவேக புல்லட் ரயிலில் பயணித்தோம். வரும் வழியில் உள்ள ஊர்களில் உள்ள வீடுகளையும் மக்களையும் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது. ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளியில்கூட, தோட்டம் அமைத்து விவசாயம் செய்கிறார்கள். அதனால் எந்தப் பக்கம் பார்த்தாலும் பசுமை கண்களை நிறைத்தது. ஜப்பானில் உள்ள மலைகளில் உயரமான ப்யூஜி மலையை பயண வழியில் காண முடிந்தது. இந்தியாவில் உயரமான இமயமலை, பனிமலையாகும். ஜப்பானின் ப்யூஜி எரிமலையாகும். ஜப்பானியர்கள் இந்த மலையைப் புனிதமாகக் கருதுகிறார்கள். பயண வழியெங்கும் பல ஊர்களை இணைப்பதற்காகக் கட்டப்பட்டுள்ள பாலங்களைத் தொடர்ந்து காண முடிந்தது.
டோக்கியோவில் இந்தியாவுக்கான தூதர் திரு.சிபி ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு அளித்தார். ஜப்பான் தலைநகரில் உள்ள தமிழர்களும் அன்புடன் வரவேற்றனர். தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் அமைப்பினர் திரளாகத் திரண்டு, இந்த நிகழ்வை சிறப்பான முறையில் நடத்தினர். பண்பாட்டு விழாவை அருமையான தமிழ்ப்பாடலுடன் தொடங்கினர். பறை இசையால் அரங்கம் அதிர்ந்தது. நடனங்கள், தற்காப்புப் பயிற்சிகள் எனத் தமிழர் கலைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். ஜப்பான் தமிழர்களின் கலையார்வத்தால் ஈர்க்கப்பட்டு, அந்த நிகழ்ச்சிகளை என் செல்போனில் ஆர்வத்துடன் வீடியோ எடுத்தேன்.
அரசு நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என்று பரபரப்பாகவும் நேர நெருக்கடியுடனும் இருந்து வரும் எனக்கு, இந்தக் கலை நிகழ்ச்சிகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதை என்னுடைய பேச்சில் குறிப்பிட்டேன். ஜப்பான் நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடர்புகளை எடுத்துக்கூறி, டோக்கியோவில் வாழும் தமிழர்கள் கீழடி அருங்காட்சியகத்தையும், விரைவில் அமையவிருக்கும் பொருநை அருங்காட்சியகத்தையும் காண்பதற்குத் தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். விழா ஏற்பாட்டாளர்கள், “பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்குப் பிறகு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜப்பானுக்கு வந்தது நீங்கள்தான்” என்றனர். தமிழர்களின் அன்பு மழையில் நனைந்து, செல்ஃபி எடுத்துக் கொண்டபோது, டோக்கியோவில் ஒரு தமிழ்நாடு என்ற உணர்வு ஏற்பட்டது.
இதையும் படிக்க : ஜப்பான் பயணத்தை விவரித்த முதலமைச்சர்...!
மே - 29 திங்கட்கிழமை :
ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது. தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியையும் நமது அரசின் முயற்சிகளையும் ஜெட்ரோ சேர்மன் பாராட்டினார
மே - 30 செவ்வாய்கிழமை :
டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான NEC Future Creation Hub-க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன தொழில்நுட்ப வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனத்திற்கும் இடையே, 128 கோடி ரூபாய் முதலீட்டில் தானியங்கி இரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி தொழிற்சாலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், உலகின் முன்னணி நிறுவனமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஓம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் இந்தியாவின் முதல் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மே - 31 புதன்கிழமை :
இந்நிலையில் சிங்கப்பூர் - ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து டோக்கியோ விமான நிலையத்திலிருந்து, சிங்கப்பூர் வந்து அங்கிருந்து விமானம் மூலமாக இன்று இரவு முதலமைச்சர் சென்னை திரும்புகிறார்.