அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பலத்தை இழக்காதா ஈ.பி.எஸ்...!

அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பலத்தை இழக்காதா ஈ.பி.எஸ்...!

இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திருந்தது. அதற்கான பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. அதேசமயம் அந்த பணியை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வகையில் அனைத்துக்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்து.

தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு:

தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு அழைப்பு விடுத்திருந்தார்.  அதில் குறிப்பாக அதிமுக தரப்பினருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. 

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்:

தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ் க்கு தனியாக அழைப்பு விடுக்கவில்லை. ஒற்றை தலைமை பிரச்சனையால் கட்சி தலைமை அலுவலகம் இ.பி.எஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால், இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் ஓ.பி.எஸ் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, தங்களது அணியினரும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் தரத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓ.பி.எஸ்ஸின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட இந்திய தேர்தல் ஆணையம்:

நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கடிதம் எழுதிய ஓ.பி.எஸ்ஸின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது. இதனால் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு  ஓ.பிஎஸ் தரப்பில் தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. 

ஆலோசனை கூட்டம் தொடங்கியது:

இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய படி வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று தொடங்கியது. அதேசமயம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் அழைப்பு விடுத்திருந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 கட்சிகளும் கலந்து கொண்டது. 

முதலாவதாக சென்ற ஓ.பி.எஸ் அணியினர்:

அனைத்துக்கட்சி கூட்டத்திற்காக அதிமுக சார்பில் ஈ.பி.எஸ், ஓபிஎஸ் இருவருக்கும் தனி தனியாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தொடங்கிய ஆலோசனை கூட்டத்திற்கு முதல் ஆளாக ஓ.பி.எஸ் சார்பில் கோவை செல்வராஜ் சென்றிருந்தார். அவர் முன் அதிமுக பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக பெயர் பலகையை எடுத்து தன்முன் வைத்துக்கொண்ட ஈ.பி.எஸ் அணியினர்:

தேர்தல் ஆணைய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் தரப்பில் கோவை செல்வராஜூம், ஈ.பி.எஸ் தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துக்கொண்டனர். அவர்கள் இருவரும் கூட்டத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது, ஓ.பி.எஸ் தரப்பினர் முதலில் சென்றதால் அதிமுக பெயர் பலகையை தன்முன் வைத்திருந்தார். ஆனால் அதன்பின் சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவை செல்வராஜ் முன் இருந்த அதிமுக பெயர் பலகையை எடுத்து தன்முன் வைத்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

பெயர் பலகைக்காகவே ஓ.பி.எஸ் அணியினர் முதல் நபராக வந்தாரா?:

அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதல் நபராக வந்தால் அதிமுக பெயர் பலகை நம்மிடம் இருக்கும் என்ற கோணத்தில் ஆலோசித்து தான் கோவை செல்வராஜ் அனைவருக்கும் முன்பாக கூட்டத்திற்கு வந்தாரா? தேர்தல் ஆணையம் முதலில் அழப்பு விடுத்தது ஈ.பி.எஸ்க்கு தான் ஆனால் ஓ.பி.எஸ் கூட்டத்தில் தான் பங்கேற்க அனுமதி வழங்குமாறு  கடிதம் எழுதிய பின்பு அவருக்கு அழைப்பாணது விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் அணியினர் ஏன் முதலாவதாக பங்கேற்க வேண்டும்? என்ற கேள்விகள் அரசியல் வல்லுநர்களிடம் ஏற்படுகிறது. 

அனைத்துக்கட்சி கூட்டத்திலும் பலத்தை இழக்காத ஈ.பிஎஸ்:

அனைத்துக்கட்சி கூட்டத்திலும் , அதிமுக பெயர் பலகையை ஓ.பி.எஸ் தரப்பினருக்கு விட்டுக்கொடுக்காமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடுத்துக்கொண்டது ஈ.பி.எஸ் ஸின் பலத்தை அறியமுடிகிறது. முதலில் சென்றது என்னமோ ஓ.பி.எஸ் தரப்பினர் ஆனால் அதிமுக பெயர் பலகை கிடைத்தது என்னமோ ஈ.பிஎஸ் தரப்புக்கு தான்.