பார்ட்டி முடித்து திரும்பிய யாஷிகா கார் விபத்து..! விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலி..!

மதுபோதையில் விபத்து நடந்ததா? அப்பளம் போல் நொறுங்கிய கார்..!
பார்ட்டி முடித்து திரும்பிய யாஷிகா கார் விபத்து..!  விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலி..!
Published on
Updated on
2 min read

ஈ.சி.ஆரில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்தில் சிக்கியது. விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பஞ்சாப்பை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலாக வலம் வந்த நிலையில், துருவங்கள் 16 என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து  பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய யாஷிகா, இருட்டு அறையில் முரட்டு குத்து என்றப் படம் மூலம் கவர்ச்சி நாயகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார். 

கடந்த 2018-ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் நடந்த ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்களிடம் பிரபலமான யாஷிகா,  உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், சல்ஃபர், பாம்பாட்டம் உள்ளிட்ட பல படங்களை கை வசம் வைத்துள்ளார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்று திரும்பிய யாஷிகாவின் கார் ஈ.சி.ஆர் அருகே சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிய காரை மீட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் என்ன? மதுபோதையில் விபத்து நடைபெற்றதா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com