அதிமுக அலுவலக வழக்கு…கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல்!

அதிமுக அலுவலக வழக்கு…கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல்!

அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் ஈ.பி.எஸ் மற்றும் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக அலுவலக வழக்கு

கடந்த ஜூலை 11 அன்று ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அங்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இரு தரப்பும் மோதிக் கொண்டதில் காவலர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனால் அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையினர் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரிடம் அதிமுக அலுவலக சாவியை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு முகாந்திரம் இல்லை

ஓ.பி.எஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் இல்லாதபோது அ.தி.மு.க அலுவலகத்தின் அதிகார உரிமையை கோர முடியாது. ஓ.பன்னீர்செல்வம்  கட்சி தலைமையகத்தின் சாவியை தன் வசம் ஒப்படைக்க கோருவதில் எந்த முகாந்தரமும் இல்லை. மேலும் ஓ.பி.எஸ் பண விவகாரங்களில் கையாடல்கள் நடத்தியுள்ளார், எனவே இவ்வாறு கையாடல் நடத்திய ஒருவருடம் எவ்வாறு நீதிமன்றம் அலுவலக சாவியை ஒப்படைக்கக்கூடாது, ஒப்படைக்க முடியாது. அதேபோல அ.தி.மு.க அலுவலகத்தில் ஒ.பி. எஸ் தன் தரப்பு ஆதரவாளர்களுடன் வன்முறையில் ஈடுபட்டார், பொருட்களை சேதப்படுத்தியுள்ளார், இவ்வாறு கட்சியிக்கு எதிராக நடக்கு ஒருவர் அலுவலக நிர்வாக உரிமையை கோர முடியாது. எனவே ஓ.பி.எஸ் அ.தி.மு.க அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனெவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஈ.பி.எஸ் தனது பதில் மனுவில் கோரியுள்ளார்.


வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை

அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்ததை எதிர்த்த வழக்கில் தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் பதில் மனு தாக்கல். அ.தி.மு.க அலுவலக அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்தவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்பகுதில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல்துறையினர் வன்முறை மேலும் பரவாமல்  கட்டுப்படுத்தியது. அதேபோல் இந்த வன்முறை விவகாரம் தொடர்பாக ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது, வன்முறையை வழக்குகளும் பதியப்பட்டது. மேலும் அ.தி.மு.க அலுவலக சாவியை ஒப்படைக்கு விவகாரம் என்பது நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது. அதன்படி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தபடி அ.தி.மு.க அலுவலக சாவி எடப்பீடி பழனிசாமி வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் வருஙாய் கோட்டாட்சியர் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுக்கவில்லை மாறாக நீதுமன்ற உத்தரவையே செயல்படுத்துயுள்ளார்.