மீண்டும் ஓங்கிய ஓபிஎஸ் கை..! அதிமுக தேர்தலுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!

மீண்டும் ஓங்கிய ஓபிஎஸ் கை..! அதிமுக தேர்தலுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் செய்த மேல் முறையீடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

ஓபிஎஸ் வெற்றி:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என ஆகஸ்ட் 17 ஆம் தேதி உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அதை அடுத்து ஓபிஎஸ் அனைவரையும் கூட்டு தலைமையில் அதிமுகவை வழிநடத்த அழைப்பு விடுத்தார்.

ஈபிஎஸ் வெற்றி:

தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு விசாரணையில், தனி நீதிபதியின் உத்தரவு செல்லாது எனவும், ஜூலை 11 இல் நடந்த திமுக பொதுக்குழு செல்லும் எனவும் உயர் நீதிமன்ற இரு அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் அதிமுகவின் இடைகாலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்கிறார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த ஈபிஎஸ் தரப்பு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 

மேலும் படிக்க : எடப்பாடி! வராதீர்! வராதீர்..! ஓபிஎஸ் கோட்டையில் ஈபிஎஸ்க்கு எதிர்ப்பு..!

ஓபிஎஸ் மேல் முறையீடு:

உயர் நீதிமன்ற இரு நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமி சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகம் சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று விசாரணை:

அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏழாவது அமர்வில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அதிமுக வழக்கில் நீதிமன்ற தீர்ப்புகள் மாறி மாறி வந்துகொண்டிருப்பதால் இன்றைய வழக்கு விசாரணை மீதான எதிர்பார்ப்பு அதிகமா இருந்தது.

மேலும் படிக்க: 1991 போல..! திமுகவிற்கு மிரட்டல் விடுத்த எச்.ராஜா..!

மீண்டும் ஓங்கிய ஓபிஎஸ் கை:

இன்றைய விசாரணையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுக்குழு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

தேர்தலுக்கு செக்:

ஓபிஎஸ் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணையை தசரா விடுமுறை முடிந்து விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தக்கூடாது என அதிரடி உத்தரவையும் பிறப்பித்துள்ளனர். இது ஓபிஎஸ்க்கு சாதகமாகவே பார்க்கப்படுகிறது.